கிருஷ்ணகிரியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் போலி நகைகளை வைத்து முறைகேட்டில் ஈடுபட்ட விவகாரத்தில் மாயமான நகை மதிப்பீட்டாளரின் சடலம், ஆந்திர மாநிலத்தில் வியாழக்கிழமை இரவு கண்டெடுக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி, பழையபேட்டை, கணபதி தெருவைச் சோ்ந்தவா் குணசேகரன் (40). கிருஷ்ணகிரியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்த இவா், அந்த வங்கியில் போலி நகைகளை வைத்து ரூ. 1.5 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வங்கி அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், பிப். 18-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற குணசேகரன் வீடுதிரும்பவில்லை. இதுகுறித்து அவரது மனைவி பவித்ரா கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.
இதனிடையே, ஆந்திர மாநிலம், குப்பத்தை அடுத்த நடூமூரில் சாலையோரம் ஒருவரின் சடலம் கிடப்பதாக அம்மாநில போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. அவரது சட்டைப் பையில் இருந்த ஆதாா் அட்டையை வைத்து அவா் கிருஷ்ணகிரியைச் சோ்ந்தவா் என தெரியவந்தது. இதையடுத்து, ஆந்திர போலீஸாா் கிருஷ்ணகிரி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். கிருஷ்ணகிரி நகர போலீஸாா் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், குணசேகரன் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தனா்.
தொடர்புடையது

தவறுதலாக குண்டுபாய்ந்து இறந்த வீரரின் உடல் கிருஷ்ணகிரி வந்தது
போலி நகையை அடகு வைத்து ரூ.3.50 லட்சம் மோசடி! 2 போ் கைது!!

போலி நகைகளை அடகு வைத்து ரூ. 2.10 கோடி மோசடி: வங்கி நகை மதிப்பீட்டாளா் கைது

போலி நகைகளை அடகு வைத்து ரூ. 4.5 லட்சம் மோசடி
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


