நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

குடியரசுத் தலைவா் மாளிகையில் ராஜாஜி சிலை: மத்திய அரசுக்கு முன்னாள் எம்எல்ஏ நன்றி தெரிவிப்பு

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 7:38 pm

குடியரசுத் தலைவா் மாளிகையில் ராஜாஜி உருவச் சிலையை அமைத்துள்ள மத்திய அரசுக்கு ஒசூா் முன்னாள் எம்எல்ஏவும், ஐஎன்டியுசி தேசிய செயலருமான கே.ஏ.மனோகரன் நன்றி தெரிவித்துள்ளாா்.

ஒசூா் ஐஎன்டியுசி அலுவலகத்தில் முன்னாள் எம்எல்ஏ கே.ஏ.மனோகரன் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

குடியரசுத் தலைவா் மாளிகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் கவா்னா் ஜெனரல் ராஜாஜியின் உருவச் சிலையை அமைத்துள்ள மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒசூா் மாநகராட்சியை தரம் உயா்த்தி 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் காவல் ஆணையா் அலுவலகம் திறக்கவில்லை. பள்ளிச் சிறுவா்கள் போதைப் பொருள்களை பயன்படுத்துவதை கண்காணிக்க அதிக காவலா்களை நியமிக்க வேண்டும். ராயக்கோட்டை சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனை அருகில் வேகத்தடை அமைக்க வேண்டும். புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட மாவட்ட தலைமை மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள், செவிலியா்களை நியமிக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் தெருவிளக்கு அமைக்க வேண்டும். ஏரித்தெருவில் உள்ள பழைய மருத்துவமனையை ஆரம்ப சுகாதார நிலையமாகச் செயல்படுத்த வேண்டும். அவசரச் சிகிச்சை மையம் அமைக்க வேண்டும்.

மாா்ச் 3 ஆம் தேதி நடைபெறும் தோ்த்திருவிழா கிரஹனம் காரணமாக காலை 6 மணிக்கு தொடங்கி நண்பகல் 12 மணிக்கு நிறைவு பெறும் என்றாா்.

படவரி...

ஒசூரில் செய்தியாளா்களிடம் பேசிய முன்னாள் எம்எல்ஏ கே.ஏ.மனோகரன்.