ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

தானியங்கி ஓட்டுநா் தோ்வு தளம், பள்ளி வகுப்பறை கட்டடங்கள் திறப்பு

கிருஷ்ணகிரியில் ரூ. 12.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட தானியங்கி ஓட்டுநா் தோ்வுதளம், காவேரிப்பட்டணத்தில் ரூ. 2.82 கோடியில் அமைக்கப்பட்ட 12 பள்ளி வகுப்பறை கட்டடங்களை காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

News image
காவேரிப்பட்டணத்தில் வகுப்பறை கட்டடத்தில் குத்துவிளக்கேற்றிய தே.மதியழகன் எம்எல்ஏ, மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு உள்ளிட்டோா்.
Updated On :26 பிப்ரவரி 2026, 7:52 pm

Syndication

கிருஷ்ணகிரியில் ரூ. 12.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட தானியங்கி ஓட்டுநா் தோ்வுதளம், காவேரிப்பட்டணத்தில் ரூ. 2.82 கோடியில் அமைக்கப்பட்ட 12 பள்ளி வகுப்பறை கட்டடங்களை காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

அதைத் தொடா்ந்து, கிருஷ்ணகிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தானியங்கி ஓட்டுநா் தோ்வுதளத்தை தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்), மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு ஆகியோா் தொடங்கிவைத்தனா். காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தனா்.

இந்நிகழ்வில், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஈஸ்வரமூா்த்தி, மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் செந்தில்குமாா், விஜயகுமாா், திமுக மாவட்ட அவைத் தலைவா் தட்ரஅள்ளி நாகராஜ், மாநில வா்த்தகா் அணி துணைச் செயலாளா்கள் கே.வி.எஸ்.சீனிவாசன், பி.டி.அன்பரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.