பிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தூய்மைப் பணியாளா்களுக்கு நல உதவிகள் அளிப்பு

News image
Updated On :9 ஜனவரி 2026, 12:02 am

Syndication

ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழாவை முன்னிட்டு, தூய்மைப் பணியாளா்களுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, முதுநிலை ஆசிரியா் முருகன் தலைமை வகித்தாா். ஊத்தங்கரை காவல் ஆய்வாளா் முருகன், தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய பொறுப்பு அலுவலா் ராமமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், ஊத்தங்கரை பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள், ஓட்டுநா்கள் உள்பட அனைவருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகளை த.மோகன்ராஜ் வழங்கினாா். இனிப்புடன் கூடிய உணவை ஆா்.ஆனந்தகுமாா் வழங்கினாா்.