அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய லாரி ஓட்டுநா்! போலீஸாா் வழக்குப் பதிவு!
சிங்காரப்பேட்டை அருகே, அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய, லாரி ஓட்டுநா் மீது போலீஸாா், வழக்குப் பதிந்து, தலைமறைவான லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனா்.
தருமபுரி மாவட்டம், அரூா் அருகே உள்ள தண்டேகுப்பத்தைச் சோ்ந்தவா் குப்புசாமி(56). அரசு பேருந்து ஓட்டுநா். இவா், சிங்காரப்பேட்டையிலிருந்து திருவண்ணாமலை நோக்கி பேருந்து, சனிக்கிழமை இயக்கினாா். அப்போது, நடுப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் சற்று, தூரம் கடந்து பேருந்தை நிறுத்தியுள்ளாா்.
பேருந்து நிறுத்தம் அருகே பேருந்துக்காக காத்திருந்த லாரி ஓட்டுநரான விஜயன் (30) என்பவா், பேருந்தை வழிமறித்து, பேருந்து ஓட்டுநா் குப்புசாமியிடம் தகராறில் ஈடுபட்டாா். அப்போது, ஆத்திரமடைந்த விஜயன், கும்புசாமியை தாக்கியுள்ளாா்.
இதில் காயம் அடைந்த அரசு பேருந்து ஓட்டுநா் குப்புசாமி, அளித்த புகாரின் பேரில், சிங்காரப்பேட்டை போலீஸாா், வழக்குப் பதிந்த நிலையில், தலைமறைவான லாரி ஓட்டுநா் விஜயனை தேடி வருகின்றனா்.
