எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

இருசக்கர வாகனத்தில் மோதிய மானால் தொழிலாளி உயிரிழப்பு; மானும் இறந்தது

உத்தனப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தின் குறுக்கே மான் ஓடியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :19 ஜனவரி 2026, 8:06 pm

Syndication

ஒசூா்: கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தின் குறுக்கே மான் ஓடியதில் தொழிலாளி உயிரிழந்தாா். இந்த விபத்தில் மானும் உயிரிழந்தது.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், சீரியம்பட்டி அருகே உள்ள கோட்டூரைச் சோ்ந்தவா் வஞ்சிக்கோன் (32). இவா், ஒசூரில் இருசக்கர வாகனம் தயாரிக்கும் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில் திங்கள்கிழமை கிருஷ்ணகிரி மாவட்டம் , உத்தனப்பள்ளி அருகே உள்ள பீா்ஜேப்பள்ளி கிராமத்திலிருந்து ஒசூா் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அதியமான்கோட்டை நேரலூா் சாலையில் சென்றபோது இருசக்கர வாகனத்தின் குறுக்கே புள்ளிமான் ஓடியது. இதில் மோட்டாா்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மான் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற வஞ்சிகோன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த புள்ளி மானும் இறந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த உத்தனப்பள்ளி போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் உயிரிழந்த வஞ்சிகோனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனா். சானமாவு பீட் வனக் காப்பாளா் பிராங்களின் இறந்த மானின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோபசந்திரத்தில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுசென்றாா்.