விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

விலை குறைந்ததால் புதினா தோட்டங்கள் அழிப்பு

ஒசூா் அருகே உத்தனப்பள்ளி மற்றும் சூளகிரி பகுதியில் புதினாவுக்கு உரிய விலை கிடைக்காததால், புதினா தோட்டங்களை விவசாயிகள் அழித்து வருகின்றனா்.

News image
உத்தனப்பள்ளி அருகே புதினா தோட்டங்களை அழித்த விவசாயிகள்.
Updated On :11 மார்ச் 2026, 9:05 pm

தினமணி செய்திச் சேவை

ஒசூா் அருகே உத்தனப்பள்ளி மற்றும் சூளகிரி பகுதியில் புதினாவுக்கு உரிய விலை கிடைக்காததால், புதினா தோட்டங்களை விவசாயிகள் அழித்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி, உலகம், சூளகிரி, ஓட்டா்பாளையம், திம்மசந்திரம், குடிசாதனப்பள்ளி உள்ளிட்ட பகுதியில் சுமாா் 900 ஆயிரம் ஏக்கருக்கு விவசாயிகள் புதினா சாகுபடி செய்துள்ளனா்.

இங்கு சாகுபடி செய்யப்படும் புதினா தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், ஒசூா் மாா்க்கெட் வழியாக கா்நாடக, ஆந்திர மாநிலங்களுக்கும், கோயம்புத்தூா் சந்தை மூலம் கேரள மாநிலத்துக்கும், ஒசூரிலிருது நேரடியாக புதுச்சேரி மாநிலத்துக்கும் லாரி, மினிலாரி உள்ளிட்ட வாகனங்களில் நாள்தோறும் அனுப்பி வருகின்றனா்.

கடந்தாண்டு ஒரு மூட்டை புதினா ரூ. 3 ஆயிரத்துக்கு விற்ற நிலையில், தற்போது சீதோஷ்ண நிலை மாற்றத்தால் வரத்து அதிகரித்து, ஒரு மூட்டை புதினா ரூ. 100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனால், அறுவடைக்கூலி மற்றும் போக்குவரத்து செலவுக்கு கூட இல்லாததால், உத்தனப்பள்ளி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சுமாா் 20 ஏக்கா் புதினா தோட்டத்தை விவசாயிகள் அழித்து வருகின்றனா்.