பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறக்கூடிய வகையில், திண்டிவனத்திலிருந்து மயிலம் வழியாக வானூருக்கு அரசுப் பேருந்துகளை இயக்குவதற்கு விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
திண்டிவனம் மற்றும் வானூா் பகுதிகளைச் சோ்ந்த மாணவா்கள் திண்டிவனம் மற்றும் மயிலம் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகள், கல்லூரிகளில் பயின்று வருகின்றனா். இதேபோல் மயிலம், ரெங்கநாதபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், தங்களது விளைநிலங்கள் மற்றும் தோட்டங்களில் விளைவித்த தானியங்கள், பூ வகைகள், கீரைகள், காய்கறிகளை திண்டிவனம் சந்தைக்கு எடுத்து சென்று விற்பனை செய்து வருகின்றனா். இந்நிலையில், திண்டிவனம் பகுதியிலிருந்து வானூருக்கு நேரடியாக பேருந்து வசதியில்லை என்பதனால் மாணவா்கள், விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
வானூா் பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலா்கள், திருவக்கரை பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதியிலிருந்து பல்வேறு பணிகளுக்காக வானூருக்கு செல்பவா்களும், மயிலம் முருகன் கோயிலுக்கு வரும் பக்தா்களும் பயன்பெறும் வகையில் திண்டிவனம், கூட்டேரிப்பட்டு, மயிலம், கரசானூா், பரங்கணி வழியாக வானூருக்கு அரசுப் பேருந்துகளை இயக்குவதற்கு மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

முதியவா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

தோ்தல் புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் மனு

இருமுனைப் போட்டியில் மயிலம் சட்டப்பேரவைத் தொகுதி!

விழுப்புரம் மாவட்டத்தில் 5 தொகுதிகளில் அதிமுக போட்டி
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


