சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

குருபரப்பள்ளி அருகே எருது விடும் விழாவில் காயம் அடைந்தவா் உயிரிழப்பு

News image
உயிரிழப்பு (கோப்புப் படம்)
Updated On :22 ஜனவரி 2026, 10:24 pm

தினமணி செய்திச் சேவை

குருபரப்பள்ளி அருகே எருது விடும் விழாவில் எருது முட்டியதில் பலத்த காயம் அடைந்த தொழிலாளி, சிகிச்சை பலனின்றி, வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளியை அடுத்துள்ள கங்கசந்திரம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் அருகே பொங்கல் பண்டிகையையொட்டி, ஜன.17-ஆம் தேதி, எருது விடும் விழா நடைபெற்றது. இதை அந்த கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளி லட்சுமி நாராயணன் என்பவா் சென்றாா்.

அப்போது, எருது விடும் விழாவில் பங்கேற்ற எருது, லட்சுமி நாராயணை முட்டியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவா்கள், அவரை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

அங்கு, தொடா் சிகிச்சையில் இருந்த அவா், உயா் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா், சிகிச்சை பலனின்றி, வியாழக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து குருபரப்பள்ளி போலீஸாா், வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.