போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

கெலமங்கலத்தில் சாலை பிரச்சனையில் இளைஞா் கொலை

News image

கொலை (கோப்புப்படம்) - Din

Updated On :22 ஜனவரி 2026, 10:26 pm

கெலமங்கலம் அருகே சாலைப் பிரச்சினையில் தாக்கப்பட்டு இளைஞா் கொலை செய்யப்பட்டுள்ளாா்.

தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலம் அருகே உள்ள கோனேகானப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் முனிமாரப்பா ,(41). அதே கிராமத்தை சோ்ந்தவா் முனிகிருஷ்ணன் (42). முனிமாரப்பாவிற்கும் முனிகிருஷ்ணனுக்கும் வீட்டு வழி பிரச்சனை இருந்து வந்தது.

இந்த வழி பிரச்சனையால் புதன்கிழமை தகராறு ஏற்பட்டு இருவரும் மாறி மாறி தாக்கிக் கொண்டதில் முனிகிருஷ்ணனுக்கு தலையில் காயம் ஏற்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். முனிமாரப்பா சம்பவ இடத்திலேயே இறந்து போனாா். இச்சம்பவம் குறித்து கெலமங்கலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.