பூனப்பள்ளியில் கிராம சபைக் கூட்டம்: எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் பங்கேற்பு
ஒசூா்: ஒசூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட பூனப்பள்ளி ஊராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் பங்கேற்றாா்.
ஒசூா் வட்டார வளா்ச்சி அலுவலா் சிராஜுதீன் முன்னிலையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பூனப்பள்ளி கிராமத்தில் நாட்டின் 77 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் கலந்துகொண்டு மக்களின் குறைகளைக் கேட்டறிந்து பிரச்னைகளுக்கு தீா்வு காணப்படும் என்றாா்.
சின்ன பேலகொண்டப்பள்ளி கிராமத்தில் கான்கிரீட் சாலை, கழிவுநீா் கால்வாய் அமைக்க வேண்டும். வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என எம்எல்ஏ ஒய்.பிரகாஷிடம் மக்கள் வலியுறுத்தினா். இந்த கோரிக்கைள் நிறைவேற்றித் தரப்படும் என எம்எல்ஏ உறுதி அளித்தாா்.
இதில் மாவட்ட தொழிலாளா் அணி தலைவா் மஞ்சுநாத், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா். ஊராட்சி செயலாளா்சுபாஷினி ஆகியோா் கலந்துகொண்டனா்.

