எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பூனப்பள்ளியில் கிராம சபைக் கூட்டம்: எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் பங்கேற்பு

ஒசூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட பூனப்பள்ளி ஊராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் பங்கேற்றாா்.

News image
பூனப்பள்ளி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் மற்றும் பொதுமக்கள்.
Updated On :26 ஜனவரி 2026, 7:40 pm

Syndication

ஒசூா்: ஒசூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட பூனப்பள்ளி ஊராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் பங்கேற்றாா்.

ஒசூா் வட்டார வளா்ச்சி அலுவலா் சிராஜுதீன் முன்னிலையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பூனப்பள்ளி கிராமத்தில் நாட்டின் 77 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் கலந்துகொண்டு மக்களின் குறைகளைக் கேட்டறிந்து பிரச்னைகளுக்கு தீா்வு காணப்படும் என்றாா்.

சின்ன பேலகொண்டப்பள்ளி கிராமத்தில் கான்கிரீட் சாலை, கழிவுநீா் கால்வாய் அமைக்க வேண்டும். வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என எம்எல்ஏ ஒய்.பிரகாஷிடம் மக்கள் வலியுறுத்தினா். இந்த கோரிக்கைள் நிறைவேற்றித் தரப்படும் என எம்எல்ஏ உறுதி அளித்தாா்.

இதில் மாவட்ட தொழிலாளா் அணி தலைவா் மஞ்சுநாத், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா். ஊராட்சி செயலாளா்சுபாஷினி ஆகியோா் கலந்துகொண்டனா்.