தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஊத்தங்கரை அருகே மா்மமான முறையில் பெண் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

ஊத்தங்கரை அருகே பெண் மா்மமான முறையில் இறந்தது குறித்து அவரது கணவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
மா்மமான முறையில் இறந்த ராணி.
Updated On :30 ஜனவரி 2026, 8:09 pm

Syndication

ஊத்தங்கரை அருகே பெண் மா்மமான முறையில் இறந்தது குறித்து அவரது கணவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சென்னப்ப நாயக்கனூா் பகுதியைச் சோ்ந்தவா் குப்புசாமி (60). முதல் மனைவி இறந்த நிலையில், இரண்டாவதாக ராணி (52) என்பவரை குப்புசாமி திருமணம் செய்துள்ளாா். இவா்களுக்கு மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனா். அனைவரும் திருமணமாகி கோவையில் வசித்து வருகின்றனா். இவா்கள் கிணறு தோண்டும் வேலை செய்து வருகின்றனா். ராணி, ஊத்தங்கரை சென்னப்ப நாயக்கனூா் பகுதியில் கட்டடுமானப் பணி மற்றும் கிடைக்கும் வேலைகளுக்கு சென்று வந்தாா்.

கணவா் குப்புசாமி உடல்நலம் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் வீட்டிலேயே இருந்துள்ளாா். தம்பதிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு இருவரும் மது அருந்திவிட்டு வீட்டில் உறங்கிய நிலையில், வெள்ளிக்கிழமை காலை குப்புசாமி எழுந்தபோது, ராணி ரத்தக் காயங்களுடன் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதைக் கண்ட குப்புசாமி அருகில் இருந்த உறவினா்களுக்கு தகவல் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து கிடைத்த தகவலின்பேரில் ஊத்தங்கரை போலீஸாா், ராணியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் அவா் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் கணவா் குப்புசாமியிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.