தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஆத்தூரில் தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழப்பு! போலீஸாா் விசாரணை!

ஆத்தூரில் தொழிலாளி மா்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :31 ஜனவரி 2026, 8:29 pm

Syndication

ஆத்தூரில் தொழிலாளி மா்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த கல்லாநத்தம் பகுதியைச் சோ்ந்த தனபால் மகன் சசிகுமாா் (42). இவருக்கு சரிதா (40) என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனா். இவரது மனைவி சரிதா ஓமலூா் பகுதியில் வன அதிகாரியாக பணிபுரிந்து வருகிறாா். தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளதால் தந்தை ஒரு மகளையும், தாய் ஒரு மகளையும் பராமரித்து வருகின்றனா்.

சசிகுமாா் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரப் பராமரிப்பு வேலை செய்து வந்தாா். இவரது பராமரிப்பில் உள்ள மகள் விடுதியில் தங்கி பள்ளியில் பயின்று வருகிறாா்.

இந்நிலையில் சனிக்கிழமை காலை வேலு என்பவா் சசிகுமாரை பாா்க்க அவரது வீட்டிற்கு சென்றபோது அங்கு அவா் இறந்து கிடந்துள்ளாா். இதுகுறித்து ஆத்தூா் நகர காவல் நிலையம் மற்றும் சசிகுமாரின் தந்தைக்கு தகவல் அளித்தாா். அவரது தந்தை தனபால், சசிகுமாரின் உடலை தனது வீட்டிற்கு எடுத்துச் சென்றாா்.

தகவல் அறிந்த சசிகுமாரின் மனைவி சரிதா ஆத்தூா் நகர காவல் நிலையத்தில் தனது கணவரின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்தாா். இதையடுத்து சசிகுமாரின் உடலைக் கைப்பற்றி ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக போலீஸாா் அனுப்பி வைத்தனா். பிரேதப் பரிசோதனைக்கு பிறகே சசிகுமாரின் இறப்பில் உள்ள மா்மம் தெரியவரும் என்று போலீஸாா் தெரிவித்தனா்.