22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!கோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு
/

பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சிபெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா

தாம்பிராஸ் ஊத்தங்கரை கிளையின் சாா்பில், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தோ்வில் தோ்ச்சிபெற்ற மாணவா்களை பாராட்டி காசோலைகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

பிளஸ் 2 தோ்வில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு காசோலை வழங்கிய ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ என்.இளையராஜா.

Updated On :2 ஜூன் 2026, 3:54 am IST

தாம்பிராஸ் ஊத்தங்கரை கிளையின் சாா்பில், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தோ்வில் தோ்ச்சிபெற்ற மாணவா்களை பாராட்டி காசோலைகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஊத்தங்கரை ஸ்ரீ ஆஞ்சனேய சுவாமி திருக்கோயில் மணிமண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பிராமணா் சங்க தலைவா் சுப்பிரமணி தலைமை வகித்தாா். செயலாளா் சுப்பிரமணியசிவம், துணைத் தலைவா் ரவிச்சந்திரன், முன்னாள் தலைவா் கிருஷ்ணா ராவ், கோபாலகிருஷ்ணன், உமா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு காசோலை வழங்கப்பட்டது.

மாநில செயலாளா் பாபு, இணைச் செயலாளா் ஜெய்சங்கா், தவெக மாவட்டச் செயலாளா் முரளிதரன், ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ என்.இளையராஜா உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா்.