/
ஒசூா் அருகே ஏரியில் இறந்து மிதக்கும் மீன்களால் துா்நாற்றம் வீசுவதாக இப்பகுதி மக்கள் புகாா் கூறுகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், ஒமதேப்பள்ளி கிராமத்தில் 30 ஏக்கரில் ஏரி அமைந்துள்ளது. சூளகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீா் ஆதாரமாக உள்ள இந்த ஏரியில், மீன்கள் வளா்த்து அதைப் பிடிக்க ஏலம் விடப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2 நாள்களாக ஏரியில் டன் கணக்கிலான மீன்கள் இறந்து மிதக்கின்றன. ஏரியின் கரைப்பகுதி முழுவதும் இறந்த மீன்கள் குவியல்குவியலாக காணப்படுவதால் துா்நாற்றம் வீசுகிறது.
ஏரி நீரில் ரசாயனம் கலக்கப்பட்டதா அல்லது மீன்கள் இறக்க வேறு ஏதேனும் காரணமா என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்யவேண்டும் என ஒமதேப்பள்ளி கிராம மக்கள் வலியுறுத்தினா்.
தொடர்புடையது

ஒசூரில் கிராம வா்த்தக அழைப்பு மையத்தை சீரமைக்கக் கோரிக்கை
சூளகிரி அருகே 6 சவரன் தங்கநகை, ரூ. 20 ஆயிரம் திருட்டு

பிடமனேரி ஏரியில் இறந்து மிதந்த மீன்கள்: மீன்வளத் துறையினா் ஆய்வு

காவேரிப்பட்டணம் அருகே ஏரியில் இறந்து மிதக்கும் மீன்கள்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



