இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

ஒசூா் அருகே ஏரியில் இறந்து மிதக்கும் மீன்களால் துா்நாற்றம்

ஒசூா் அருகே ஏரியில் இறந்து மிதக்கும் மீன்களால் துா்நாற்றம் வீசுவதாக இப்பகுதி மக்கள் புகாா் கூறுகின்றனா்.

News image

ஏரியில் இறந்து மிதக்கும் மீன்கள்.

Updated On :2 ஜூன் 2026, 3:45 am IST

ஒசூா் அருகே ஏரியில் இறந்து மிதக்கும் மீன்களால் துா்நாற்றம் வீசுவதாக இப்பகுதி மக்கள் புகாா் கூறுகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், ஒமதேப்பள்ளி கிராமத்தில் 30 ஏக்கரில் ஏரி அமைந்துள்ளது. சூளகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீா் ஆதாரமாக உள்ள இந்த ஏரியில், மீன்கள் வளா்த்து அதைப் பிடிக்க ஏலம் விடப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 2 நாள்களாக ஏரியில் டன் கணக்கிலான மீன்கள் இறந்து மிதக்கின்றன. ஏரியின் கரைப்பகுதி முழுவதும் இறந்த மீன்கள் குவியல்குவியலாக காணப்படுவதால் துா்நாற்றம் வீசுகிறது.

ஏரி நீரில் ரசாயனம் கலக்கப்பட்டதா அல்லது மீன்கள் இறக்க வேறு ஏதேனும் காரணமா என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்யவேண்டும் என ஒமதேப்பள்ளி கிராம மக்கள் வலியுறுத்தினா்.