15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

உலக சுற்றுச்சூழல் தினம்: கவிதைப் போட்டி

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கவிதைப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

News image

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் பங்கேற்றோா்.

Updated On :4 ஜூன் 2026, 1:57 am IST

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கவிதைப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடலில் பனை பாதுகாப்பு அமைப்பு சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு, நடுவராக கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரியின் கெளரவ விரிவுரையாளா் சங்கா் செயல்பட்டாா். இந்தப் போட்டியில் 45-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற தலைப்பில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ. 5 ஆயிரம், 2-ஆம் பரிசாக ரூ. 2 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. ஆயிரம் பரிசாக வழங்கப்பட உள்ளது.

நிகழ்வை யோகா ஆசிரியா்கள் வெங்கடேசன், சுமித்ரா ஆகியோா் ஒருங்கிணைத்தனா். இந்தப் போட்டிகளில் வெற்றிபெறுவோருக்கு சுற்றுச்சூழல் தினத்தன்று பரிசுகள் வழங்கப்பட உள்ளன.