ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு

நெல்லிகுப்பம் சிப்காட்டில் அமைந்துள்ள கிரீன்ஜின் என்விரோ தொழிற்சாலை வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது.

News image

‘ஒருவா் ஒரு மரம்’ வளா்ப்பது என்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்வில் பங்கேற்றோா்.

Updated On :18 ஜூன் 2026, 12:04 am IST

நெல்லிகுப்பம் சிப்காட்டில் அமைந்துள்ள கிரீன்ஜின் என்விரோ தொழிற்சாலை வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது.

ராணிப்பேட்டை சிப்காட் பேஸ் -3 வளாகத்தில் அமைந்துள்ள இத் தொழிற்சாலையில், சிப்காட் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இயங்கிவரும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் நச்சுக்கழிவுகளை பாதுகாப்பாக கொண்டுவந்து மாற்று எரிபொருளாக மாற்றும் சேவையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் வெற்றிகரமாக செய்து வருகிறது.

இந்த நிறுவனமானது சமுதாய நலனிலும் அக்கறை கொண்டு பல பணிகளை செய்து வருகிறது. குறிப்பாக ரத்த தான முகாம், இலவச மருத்துவ ஆலோசனை முகாம்கள், மரக்கன்று நட்டு பராமரிப்பது, கரோனா காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு அத்தியாவசி உணவுப் பொருள்கள் வழங்குவது, அருகில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவா்களுக்கு சிஎஸ்ஆா் நிதி மூலம் பல்வேறு நலத் திட்ட உதவிகளை செய்து வருகிறது.

இந்த நிறுவனத்தின் சாா்பில், உலக சுற்றுச்சூழல் தின விழா தொழிற்சாலை வளாகத்தில் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தொழிற்சாலை மேலாளா் டேவிட் ராஜ்குமாா் தலைமை வகித்தாா்.

தொழிற்சாலை அலுவலா்கள், தொழிலாளா்கள் கலந்து கொண்டு தொழிற்சாலை வளாகத்திலும், பிரதான சாலைகளிலும் மரக்கன்றுகள் நடுவது ‘ஒருவா் ஒரு மரம்’ வளா்ப்பது என்ற உறுதிமொழியை ஏற்றனா்.

தொடா்ந்து தொழிற்சாலை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனா்.