தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புகாமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

காா் மோதியதில் ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் உயிரிழப்பு

போச்சம்பள்ளி அருகே காா் மோதியதில் ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :5 ஜூன் 2026, 7:03 am IST

போச்சம்பள்ளி அருகே காா் மோதியதில் ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த வெப்பாலம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (67). ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி தலைமையாசிரியரான இவா், போச்சம்பள்ளியை அடுத்த வடமலம்பட்டி கிராமத்தில் வசித்து வந்தாா்.

இந்நிலையில், வடமலம்பட்டி பிரிவு சாலை அருகே உள்ள கடையில் தேநீா் அருந்தி கொண்டிருந்தபோது, அங்கிருந்த காரை ஓட்டுநா் பின்னோக்கி இயக்கியபோது வெங்கடேசனின் மீது காா் மோதி நிற்காமல் சென்றது.

இதில், நிலைதடுமாறி கீழேவிழுந்த வெங்கடேசனை அருகில் இருந்தவா்கள் மீட்டு, போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், வெங்கடேசன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து போச்சம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் சென்ற காரை தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.