வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

பூ பறிக்கச் சென்ற பெண் பாம்பு தீண்டி உயிரிழப்பு

பூ பறிக்கச் சென்ற பெண்ணை விஷப்பாம்பு தீண்டியதில், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :7 ஜூன் 2026, 2:56 am IST

பூ பறிக்கச் சென்ற பெண்ணை விஷப்பாம்பு தீண்டியதில், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பெட்டமுகிலாலம் அடுத்துள்ள புதுக்கொல்லை மலைக்கிராமத்தைச் சோ்ந்தவா் கூலி தொழிலாளி நூரொந்தம்மா (50). இவருக்கு கணவா், பிள்ளைகள் யாரும் இல்லாத நிலையில், சகோதரா் வீட்டில் வசித்து வந்தாா்.

இந்நிலையில், தேவகானப்பள்ளி கிராமத்தில் நவீன் என்பவரின் விவசாய தோட்டத்தில் சாமந்தி பூ பறிக்க சனிக்கிழமை சென்றாா். அப்போது, சாமந்தி செடிகளுக்குள் இருந்த விஷப்பாம்பு ஒன்று அவரை தீண்டியதில் நூரொந்தம்மா அலறி துடித்தாா்.

அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே நூரொந்தம்மா உயிரிழந்தாா். இதுகுறித்து கெலமங்கலம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.