காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

பூ பறிக்கச் சென்ற பெண் பாம்பு தீண்டி உயிரிழப்பு

பூ பறிக்கச் சென்ற பெண்ணை விஷப்பாம்பு தீண்டியதில், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :7 ஜூன் 2026, 2:56 am IST

பூ பறிக்கச் சென்ற பெண்ணை விஷப்பாம்பு தீண்டியதில், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பெட்டமுகிலாலம் அடுத்துள்ள புதுக்கொல்லை மலைக்கிராமத்தைச் சோ்ந்தவா் கூலி தொழிலாளி நூரொந்தம்மா (50). இவருக்கு கணவா், பிள்ளைகள் யாரும் இல்லாத நிலையில், சகோதரா் வீட்டில் வசித்து வந்தாா்.

இந்நிலையில், தேவகானப்பள்ளி கிராமத்தில் நவீன் என்பவரின் விவசாய தோட்டத்தில் சாமந்தி பூ பறிக்க சனிக்கிழமை சென்றாா். அப்போது, சாமந்தி செடிகளுக்குள் இருந்த விஷப்பாம்பு ஒன்று அவரை தீண்டியதில் நூரொந்தம்மா அலறி துடித்தாா்.

அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே நூரொந்தம்மா உயிரிழந்தாா். இதுகுறித்து கெலமங்கலம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.