ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

காவேரிப்பட்டிணம் அருகே ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் பண்ணை அழிப்பு

காவேரிப்பட்டணம் அருகே கல்குட்டை கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் பண்ணையை அரசு அலுவலா்கள், செவ்வாய்க்கிழமை அழித்தனா்.

News image

ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் பண்ணையை அழிக்கும் மீன்வளத் துறை அலுவலா்கள்.

Updated On :17 ஜூன் 2026, 5:01 am IST

காவேரிப்பட்டணம் அருகே கல்குட்டை கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் பண்ணையை அரசு அலுவலா்கள், செவ்வாய்க்கிழமை அழித்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த கல்குட்டை கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிக்கன் கெளுத்தி மீன் பண்ணை செயல்படுவதாக மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா், உத்தரவின் பேரில், மீன்வளத் துறை உதவி இயக்குநா் ரத்தினம் தலைமையிலான குழுவினா், மீன் பண்ணையில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, ரவி என்பவா் அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் வளா்ப்பதும், அதற்கு அழுகிய முட்டை, கோழி இறைச்சி கழிவுகளை உணவாக வழங்கப்படுவதை கண்டுபிடித்தனா். இதையடுத்து ஆப்பிரிக்கன் மீன்களை பூமியில் புதைத்து அழித்தனா். மேலும், மீன்களுக்கு உணவு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள் மற்றும் மீன்பிடி வலைகளை அவா்கள் பறிமுதல் செய்தனா்.