/
சூளகிரி அருகே மனநலன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தனியாா் தொழிற்சாலை பணியாளரை போலீஸாா் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 25 வயது பெண்ணுக்கு அதே பகுதியை சோ்ந்த முருகன் (54) பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பெண்ணின் தாயாா் சூளகிரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஒசூரில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.






