கிருஷ்ணகிரி அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்கு தண்ணீா் திறப்பது குறித்து விவசாயிகள், நீா்ப்பாசன சங்க பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி நீா்த்தேக்க திட்ட உதவி செயற்பொறியாளா் சபரிநாதன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2026- 27 ஆம் ஆண்டுக்கான முதல்போக நெல் சாகுபடி பணிகள் ஜூலையில் தொடங்குகிறது. இதற்காக, கிருஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீா் திறப்பது வழக்கம்.
இதுதொடா்பாக கிருஷ்ணகிரி நீா்த்தேக்கத் திட்ட நீா்பாசன சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் துறை அலுவலா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம், கிருஷ்ணகிரி அணையில் உள்ள உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் கிருஷ்ணகிரி அணை பாசன விவசாயிகள் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.










