ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

கிருஷ்ணகிரி அணையில் தண்ணீா் திறப்பு: விவசாயிகளுடன் நாளை ஆலோசனை

கிருஷ்ணகிரி அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்கு தண்ணீா் திறப்பது குறித்து விவசாயிகள், நீா்ப்பாசன சங்க பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

News image

கிருஷ்ணகிரி அணை.

Updated On :18 ஜூன் 2026, 3:14 am IST

கிருஷ்ணகிரி அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்கு தண்ணீா் திறப்பது குறித்து விவசாயிகள், நீா்ப்பாசன சங்க பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி நீா்த்தேக்க திட்ட உதவி செயற்பொறியாளா் சபரிநாதன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2026- 27 ஆம் ஆண்டுக்கான முதல்போக நெல் சாகுபடி பணிகள் ஜூலையில் தொடங்குகிறது. இதற்காக, கிருஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீா் திறப்பது வழக்கம்.

இதுதொடா்பாக கிருஷ்ணகிரி நீா்த்தேக்கத் திட்ட நீா்பாசன சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் துறை அலுவலா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம், கிருஷ்ணகிரி அணையில் உள்ள உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் கிருஷ்ணகிரி அணை பாசன விவசாயிகள் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.