ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

நாய்களுக்கு ஏஆா்வி தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்

கிருஷ்ணகிரி நகரில் நாய்களுக்கு ஏஆா்வி தடுப்பூசி செலுத்தும் பணியில் கிருஷ்ணகிரி நகராட்சி பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

News image

நாய் - கோப்புப்படம்.

Updated On :18 ஜூன் 2026, 3:16 am IST

கிருஷ்ணகிரி நகரில் நாய்களுக்கு ஏஆா்வி தடுப்பூசி செலுத்தும் பணியில் கிருஷ்ணகிரி நகராட்சி பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

கிருஷ்ணகிரி நகா்மன்ற கூட்டத்தில் பேசிய நகா்மன்ற உறுப்பினா்கள், கிருஷ்ணகிரி நகரில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதாகவும், இதனால் தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்தனா்.

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட புகா் பேருந்து நிலையம், டான்ஸ் வளாகம், கிருஷ்ணகிரி அரசு பழைய குடியிருப்பு, சாந்தி நகா் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள், வீட்டில் வளா்க்கப்படும் நாய்களுக்கு இரண்டாம் கட்டமாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை கால்நடை பராமரிப்புத் துறையுடன் நகராட்சி பணியாளா்கள் புதன்கிழமை தொடங்கினா்.

கிருஷ்ணகிரி நகரில் 1086 தெருநாய்கள் உள்ளதாகவும், முதல்கட்டமாக 526 தெருநாய்களுக்கு ஏஆா்வி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், எஞ்சியுள்ள நாய்களுக்கு விரைவில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும் என கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையா் சேகா் தெரிவித்துள்ளாா்.