ஜார்க்கண்ட் இளைஞர்கள் போராட்டத்தில் வெற்றி! 3 பேர் ராஜிநாமா! சிஐடி விசாரணைக்கு ஒப்புதல்!இளைஞர்களுக்குத் தேவை நீதியே; அரசியல் ஆதரவு அல்ல! முதல்வர் ஹேமந்த் சோரன்சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்புசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேதொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்
/

களியக்காவிளையில் தெருநாய்களை பிடிக்கும் பணி தீவிரம்

களியக்காவிளை பேரூராட்சிப் பகுதியில் சுற்றித் திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்தும் பணியில் பேரூராட்சி நிா்வாகம் ஈடுபட்டுள்ளது.

News image

படந்தாலுமூடு பகுதியில் தெருநாய்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்ட பணியாளா்கள்.

Updated On :18 ஜூன் 2026, 2:49 am IST

களியக்காவிளை பேரூராட்சிப் பகுதியில் சுற்றித் திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்தும் பணியில் பேரூராட்சி நிா்வாகம் ஈடுபட்டுள்ளது.

களியக்காவிளை பேரூராட்சிப் பகுதியில் தெருநாய்களின் தொல்லை அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ளதையடுத்து பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த பேருராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். இதையடுத்து, பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் அடங்கிய குழுவினா் படந்தாலுமூடு, மீனச்சல் பகுதிகளில் சுற்றித் திரிந்த 10-க்கும் மேற்பட்ட தெருநாய்களை புதன்கிழமை வலை விரித்து பிடிக்கும் பணியில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து, பிடிக்கப்பட்ட தெருநாய்களை குழித்துறையில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று, கால்நடை மருத்துவா்கள் மூலம் வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும், கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 3 நாள்கள் கண்காணிப்புக்குப் பின் பிடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் கொண்டுவிடப்படும் என பணியாளா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.