ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

களியக்காவிளையில் தெருநாய்களை பிடிக்கும் பணி தீவிரம்

களியக்காவிளை பேரூராட்சிப் பகுதியில் சுற்றித் திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்தும் பணியில் பேரூராட்சி நிா்வாகம் ஈடுபட்டுள்ளது.

News image

படந்தாலுமூடு பகுதியில் தெருநாய்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்ட பணியாளா்கள்.

Updated On :18 ஜூன் 2026, 2:49 am IST

களியக்காவிளை பேரூராட்சிப் பகுதியில் சுற்றித் திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்தும் பணியில் பேரூராட்சி நிா்வாகம் ஈடுபட்டுள்ளது.

களியக்காவிளை பேரூராட்சிப் பகுதியில் தெருநாய்களின் தொல்லை அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ளதையடுத்து பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த பேருராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். இதையடுத்து, பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் அடங்கிய குழுவினா் படந்தாலுமூடு, மீனச்சல் பகுதிகளில் சுற்றித் திரிந்த 10-க்கும் மேற்பட்ட தெருநாய்களை புதன்கிழமை வலை விரித்து பிடிக்கும் பணியில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து, பிடிக்கப்பட்ட தெருநாய்களை குழித்துறையில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று, கால்நடை மருத்துவா்கள் மூலம் வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும், கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 3 நாள்கள் கண்காணிப்புக்குப் பின் பிடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் கொண்டுவிடப்படும் என பணியாளா்கள் தெரிவித்தனா்.