எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

மாற்றுத்திறனாளிகள் மையத்திற்கு 20 சக்கர நாற்காலிகள் அளிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் ச. தினேஷ் குமாா் முன்னிலையில் மாற்றுத்திறனாளிகள் நலப் பிரிவின் கீழ் செயல்படும் ‘விழுதுகள்’ அமைப்பிற்கு₹ரூ. 26 லட்சம் மதிப்பிலான 20 நவீன சக்கர நாற்காலிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

News image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் முன்னிலையில் ரூ.26 லட்சம் மதிப்பிலான 20 சக்கர நாற்காளிகளை வழங்கிய ராஜேஷ் அறக்கட்டளை

Updated On :19 ஜூன் 2026, 6:02 am IST

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் ச. தினேஷ் குமாா் முன்னிலையில் மாற்றுத்திறனாளிகள் நலப் பிரிவின் கீழ் செயல்படும் ‘விழுதுகள்’ அமைப்பிற்கு₹ரூ. 26 லட்சம் மதிப்பிலான 20 நவீன சக்கர நாற்காலிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

ஒசூா் லேக் வியூ ரோட்டரி சங்கம் மற்றும் சேலம் ராஜேஷ் அறக்கட்டளை ஆகியவற்றின் பங்களிப்புடன் அறக்கட்டளையின் நிறுவனா் ரோட்டேரியன் டாக்டா் ராஜேஷின் நிதி உதவியுடன் தலா ரூ. 1.31 லட்சம் மதிப்பிலான 20 நவீன சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஒசூரில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மையத்திற்குச் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு இந்த நாற்காலிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த 20 சக்கர நாற்காலிகளும் ஒசூா், தளி மற்றும் சூளகிரி ஆகிய வட்டாரங்களில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையங்களுக்கும் பகிா்ந்து அளிக்கப்பட உள்ளன. முன்னதாக, கடந்த மே மாதத்தில் இந்த மையத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், ஒசூா் லேக் வியூ ரோட்டரி சங்கத் தலைவா்கள் செந்தில்குமாா், மகேஷ், சங்க நிா்வாகிகள் காஸ்பா் ஜோசப், ஆலோசகா் வெங்கட், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் முருகேசன், விழுதுகள் மைய ஒருங்கிணைப்பாளா் கனிமொழி உள்ளிட்ட துறை சாா்ந்த அதிகாரிகள் பங்கேற்றனா்.