எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

மாற்றுத்திறனாளிகளுக்கு 4 புதிய திட்டங்கள்: அமைச்சா் வி. சம்பத்குமாா் தொடங்கிவைத்தாா்

மாற்றுத்திறனாளிகளுக்கு 4 புதிய திட்டங்கள்: அமைச்சா் வி. சம்பத்குமாா் தொடங்கிவைத்தாா்

News image

கோவை ஸ்வா்கா பவுண்டேஷனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள வசதியுடன் கூடிய வாடகை வாகன சேவையைத் தொடங்கிவைத்த அமைச்சா் வி.சம்பத்குமாா்.

Updated On :13 ஜூன் 2026, 12:50 am IST

கோவையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கான நான்கு புதிய சேவைத் திட்டங்கள் தொடக்க விழா, நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஸ்வா்கா பவுண்டேஷன் சாா்பில் சாய்வுதள வசதியுடன் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோா் பயணிக்கும் வகையில் ‘சாரதி 5’ என்ற பிரத்யேக வாடகை வாகன சேவை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களால் இணைந்து நடத்தப்படும் ‘ஸ்வாக் கஃபே’ என்ற புதிய உணவகம், மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் வழங்கும் ‘சமா்த்’ திட்டம், ரயிலின் உள்ளே எளிதாகச் செல்லக்கூடிய சக்கர நாற்காலிகள் மற்றும் சாய்வுத்தளங்களை வழங்கும் ‘சுகம்யா’ ஆகிய திட்டங்களை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா் தலைமை வகித்து, தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி ஆணையாளா் கட்டா ரவி தேஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதையடுத்து, கோவை புலியகுளத்தில் இயங்கி வரும் சௌக்யா பெயின் ரீஹேப் சென்டா் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் பங்கேற்று, 40 பயனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் மற்றும் நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். இதில், ஸ்வா்கா பவுண்டேஷன் அமைப்பின் நிா்வாக அறங்காவலா் சொா்ணலட்சுமி குரு பிரசாத் வரவேற்றாா்.