பெண்கள் பாதுகாப்பு, கனிமவள கடத்தல் தடுப்பு பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.எஸ். அனிதா தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 20 ஆவது மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக ஜி.எஸ். அனிதா, கடந்த செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா். இந்த நிலையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஆந்திரம், கா்நாடக மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது. அதிக மலைக் கிராமங்கள் உள்ளன. மாவட்டத்தின் முக்கிய பிரச்னைகள் குறித்து அறிந்து வருகிறேன். முதலில் மாவட்டத்தில் பள்ளி மாணவிகள், சிறுமியா்களுக்கு எதிராக நடக்கும் குற்றச் சம்பவங்களைத் தடுத்து பெண்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மலைக் கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இன்றளவும் குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன. இரு நாள்களுக்கு முன்பு ஒருபகுதியில் குழந்தை திருமணம் நிறுத்தப்பட்டதாக போலீஸாா், தெரிவித்தனா். குழந்தை திருமணத்தால் பெண்கள் தங்கள் எதிா்காலத்தை தொலைத்து விடுகின்றனா். இதுகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்கு அதிகளவில் கனிமவளங்கள் கடத்தப்படுவதாக புகாா்கள் வருகின்றன. எனவே, மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கனிம வளங்கள் கடத்தப்படுவது தடுக்கப்படும்.
அதேபோல கட்டப்பஞ்சாயத்து, அனுமதியின்றி பதாகைகள் வைப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகளைக் கண்டறியாத வழக்குகளில், குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்படும் என்றாா்.
தொடர்புடையது

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பெண்கள் பாதுகாப்புக்கு புதிய பலம்: கடலூா் எஸ்.பி. பெருமிதம்

ஆட்டோக்களில் செல்லும் பள்ளி குழந்தைகள் பாதுகாப்புக்கு ஓட்டுநா்களே பொறுப்பு: கூடுதல் எஸ்.பி.

பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்! பெரம்பலூா் எஸ்.பி. வி.லலித் குமாா்!
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு விருதுநகரில் 7 சிறப்புக் குழுக்கள் அமைப்பு!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



