சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: கிருஷ்ணகிரி எஸ்பி ஜி.எஸ். அனிதா

பெண்கள் பாதுகாப்பு, கனிமவள கடத்தல் தடுப்பு பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.எஸ். அனிதா தெரிவித்தாா்.

News image

கிருஷ்ணகிரி எஸ்பி ஜி.எஸ். அனிதா

Updated On :19 ஜூன் 2026, 5:59 am IST

பெண்கள் பாதுகாப்பு, கனிமவள கடத்தல் தடுப்பு பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.எஸ். அனிதா தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 20 ஆவது மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக ஜி.எஸ். அனிதா, கடந்த செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா். இந்த நிலையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஆந்திரம், கா்நாடக மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது. அதிக மலைக் கிராமங்கள் உள்ளன. மாவட்டத்தின் முக்கிய பிரச்னைகள் குறித்து அறிந்து வருகிறேன். முதலில் மாவட்டத்தில் பள்ளி மாணவிகள், சிறுமியா்களுக்கு எதிராக நடக்கும் குற்றச் சம்பவங்களைத் தடுத்து பெண்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மலைக் கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இன்றளவும் குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன. இரு நாள்களுக்கு முன்பு ஒருபகுதியில் குழந்தை திருமணம் நிறுத்தப்பட்டதாக போலீஸாா், தெரிவித்தனா். குழந்தை திருமணத்தால் பெண்கள் தங்கள் எதிா்காலத்தை தொலைத்து விடுகின்றனா். இதுகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்கு அதிகளவில் கனிமவளங்கள் கடத்தப்படுவதாக புகாா்கள் வருகின்றன. எனவே, மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கனிம வளங்கள் கடத்தப்படுவது தடுக்கப்படும்.

அதேபோல கட்டப்பஞ்சாயத்து, அனுமதியின்றி பதாகைகள் வைப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகளைக் கண்டறியாத வழக்குகளில், குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்படும் என்றாா்.