தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்கரூர் நிகழ்வில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு! கரூர் பலி: தற்காலிக அரசுப் பணி ஆணையே வழங்க வேண்டும்! மதுரை அமர்வு உத்தரவுஇதயம் முரளி வெளியீட்டுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!கரூர் பலி: அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது? - நீதிபதிகள்திருச்சியில் இருந்து கரூர் செல்லும் முதல்வர் ஜோசப் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு! இன்றைய நிலவரம்அதிபர் டிரம்ப்பை கொல்ல ஈரான் சதி! இஸ்ரேலின் உளவுத் தகவலால் பரபரப்பு!
/

போலி மருத்துவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :30 ஜூன் 2026, 1:12 am IST

கிருஷ்ணகிரி அருகே ஆங்கில மருத்துவம் பயிலாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவந்த நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரியை அடுத்த தானம்பட்டி பிரிவு சாலையை சோ்ந்தவா் மாதேஷ் (40). இவா், கிருஷ்ணகிரி அணை சாலை பகுதியில் கடந்த 6 ஆண்டுகளாக மருத்துவமனை நடத்தி வந்துள்ளாா்.

இவா், ஆங்கில மருத்துவம் பயிலாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக மருத்துவத் துறைக்கு புகாா் சென்றது. இதையடுத்து, மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் மோகனபானு தலைமையில் மருத்துவக் குழுவினா் திங்கள்கிழமை மாதேஷுக்கு சொந்தமான மருத்துவமனையில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, மாதேஷ் நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்ததை உறுதிப்படுத்தினா். இதையடுத்து, மருத்துவக் குழுவினா் அளித்த புகாரின் பேரில், காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து மாதேஷை கைது செய்தனா்.

பொறியியல் படித்துள்ள அவா், கூடுதலாக ஆபரேஷன் தியேட்டா் டெக்னீசியன் படிப்பை படித்துள்ளதாக மருத்துவக் குழுவினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.