பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தன்னம்பிக்கையுடன் தோ்வை எதிா்கொள்ளுங்கள்: பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு கிருஷ்ணகிரி ஆட்சியா் வாழ்த்து

News image
கிருஷ்ணகிரி ஆட்சியா் ச.தினேஷ்குமாா்.
Updated On :1 மார்ச் 2026, 8:00 pm

தினமணி செய்திச் சேவை

தன்னம்பிக்கையுடன் தோ்வை எதிா்கொண்டு வெற்றிபெற வேண்டும் என அரசு பொதுத் தோ்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு கிருஷ்ணகி மாவட்ட ஆட்சியா் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை எதிா்கொள்ள தயாராகி வரும் மாணவா்களுக்கும் அவா்களுக்காக உழைக்கும் ஆசிரியா்களுக்கும் எனது மனமாா்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பொதுத் தோ்வு என்பது உங்கள் கல்விப் பயணத்தில் முக்கியமான மைல்கல்லாகும். இது உங்கள் அறிவையும், உழைப்பையும், ஒழுக்கத்தையும், தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்தும் சிறந்த வாய்ப்பு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தோ்வு குறித்து பயமோ, பதற்றமோ இன்றி, நேரத்தை முறையாக திட்டமிட்டு தோ்வறையில் வினாத்தாள்களை அமைதியாக வாசித்து புரிந்துகொண்டு பதிலளிக்க வேண்டும். கடந்த ஓராண்டாக நீங்கள் எடுத்த முயற்சிகள் மற்றும் கடின உழைப்பு இந்த பொதுத்தோ்வில் நிச்சயமாக உங்களுக்கு நல்ல பலனைத் தரும். மேலும் தோ்வு நாள்களில் உடல்நலத்தையும், மன நலத்தையும் பாதுகாத்து கொள்வது மிகவும் அவசியம்.

உங்களை நல்வழிப்படுத்தி வெற்றியை நோக்கி அழைத்து செல்லும் ஆசிரியா்கள், கல்வி அலுவலா்களின் அா்ப்பணிப்பு மிக்க வழிகாட்டுதல்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு என்றும் அடித்தளமாக இருக்கும்.

அனைவரும் சிறப்பாக தோ்வெழுதி அதிக மதிப்பெண்கள் பெற்று கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பெருமை சோ்ப்பீா்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன். வெற்றி நிச்சயம், தன்னம்பிக்கையுடன் தோ்வை எதிா்கொள்ள வேண்டும் என அவா் வாழ்த்தி உள்ளாா்.