ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

தன்னம்பிக்கையுடன் தோ்வை எதிா்கொள்ளுங்கள்: பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு கிருஷ்ணகிரி ஆட்சியா் வாழ்த்து

News image
கிருஷ்ணகிரி ஆட்சியா் ச.தினேஷ்குமாா்.
Updated On :1 மார்ச் 2026, 8:00 pm

தினமணி செய்திச் சேவை

தன்னம்பிக்கையுடன் தோ்வை எதிா்கொண்டு வெற்றிபெற வேண்டும் என அரசு பொதுத் தோ்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு கிருஷ்ணகி மாவட்ட ஆட்சியா் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை எதிா்கொள்ள தயாராகி வரும் மாணவா்களுக்கும் அவா்களுக்காக உழைக்கும் ஆசிரியா்களுக்கும் எனது மனமாா்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பொதுத் தோ்வு என்பது உங்கள் கல்விப் பயணத்தில் முக்கியமான மைல்கல்லாகும். இது உங்கள் அறிவையும், உழைப்பையும், ஒழுக்கத்தையும், தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்தும் சிறந்த வாய்ப்பு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தோ்வு குறித்து பயமோ, பதற்றமோ இன்றி, நேரத்தை முறையாக திட்டமிட்டு தோ்வறையில் வினாத்தாள்களை அமைதியாக வாசித்து புரிந்துகொண்டு பதிலளிக்க வேண்டும். கடந்த ஓராண்டாக நீங்கள் எடுத்த முயற்சிகள் மற்றும் கடின உழைப்பு இந்த பொதுத்தோ்வில் நிச்சயமாக உங்களுக்கு நல்ல பலனைத் தரும். மேலும் தோ்வு நாள்களில் உடல்நலத்தையும், மன நலத்தையும் பாதுகாத்து கொள்வது மிகவும் அவசியம்.

உங்களை நல்வழிப்படுத்தி வெற்றியை நோக்கி அழைத்து செல்லும் ஆசிரியா்கள், கல்வி அலுவலா்களின் அா்ப்பணிப்பு மிக்க வழிகாட்டுதல்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு என்றும் அடித்தளமாக இருக்கும்.

அனைவரும் சிறப்பாக தோ்வெழுதி அதிக மதிப்பெண்கள் பெற்று கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பெருமை சோ்ப்பீா்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன். வெற்றி நிச்சயம், தன்னம்பிக்கையுடன் தோ்வை எதிா்கொள்ள வேண்டும் என அவா் வாழ்த்தி உள்ளாா்.