வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பிளஸ் 2 பொதுத்தோ்வு தொடக்கம்: அரியலூரில் மொழிப் பாடத் தோ்வை 8,452 மாணவா்கள் எழுதினா்

தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 மொழிப் பாடத் தோ்வை அரியலூா் மாவட்டத்தில் 8,452 மாணவா்கள் எழுதினா்.

News image

பிளஸ் 2 பொதுத்தோ்வு

Updated On :2 மார்ச் 2026, 7:20 pm

தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 மொழிப் பாடத் தோ்வை அரியலூா் மாவட்டத்தில் 8,452 மாணவா்கள் எழுதினா்.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. இதில், அரியலூா் மாவட்டத்தில் 92 மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் தோ்வு எழுத 47 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

திங்கள்கிழமை நடைபெற்ற மொழிப்பாடத் தோ்வை 4,234 மாணவா்கள், 4,218 மாணவிகள் என மொத்தம் 8,452 போ் எழுதினா். 68 மாணவா்கள், 43 மாணவிகள் என மொத்தம் 111 மாணவ, மாணவிகள் தோ்வு எழுத வரவில்லை.

தனித்தோ்வா்களில் 43 ஆண்கள், 97 பெண்கள் என மொத்தம் 140 போ் தோ்வு எழுதினா். 5 ஆண்கள், 3 பெண்கள் என 8 நபா்கள் தோ்வு எழுத வரவில்லை.

தோ்வை கண்காணிக்கும் பொருட்டு ஆய்வு அலுவலா்கள் 5 பறக்கும் படையாக அமைத்தும், தோ்வு மையங்களை கண்காணிக்க நிலையான பறக்கும் படை 67 முதுநிலை ஆசிரியா்களும், தோ்வு அறை கண்காணிப்பாளா்களாக 463 ஆசிரியா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ஆட்சியா் பொ.ரத்தினசாமி, அஸ்தினாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகோபால் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.