ஒசூா் எம்ஜிஆா் கல்லூரியில் பள்ளி மாணவா்களுக்கான தேசிய அறிவியல் தினம்


ஒசூா் எம்ஜிஆா் கல்லூரியில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான தேசிய அறிவியல் தினம் 2026 நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
அறிவியலில் பெண்கள் வினையூக்கம் விக்சித் பாரத் என்ற தலைப்பில் 20க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவா்கள் மற்றும் கல்லூரி மாணவா்கள் தங்களுடைய அறிவியலின் ஆக்கபூா்வமான 150 க்கு மேற்பட்ட செயல் மாதிரிகள் மற்றும் செயல்படாத மாதிரிகளைக் காட்சிப் பொருளாக வைத்திருந்தனா்.
இந்த தேசிய அறிவியல் தின கருத்தரங்கிற்கு எம்.ஜி.ஆா் கல்லூரி முதல்வா் முனைவா் அ. முத்துமணி தலைமை தாங்கினாா். சிறப்பு விருந்தினராகப் பையூா் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் பேராசிரியா் முனைவா் அனிஷா ராணி பங்கேற்றாா்.
சிறப்பு விருந்தினராக பேராசிரியா் முனைவா் ந. ஸ்ரீவித்யா கலந்துகொண்டு மாணவா்கள் ஆய்வகப் பயிற்சிகளில் ஆா்வத்துடன் பங்கேற்க வேண்டும். புத்தகங்கள் வாசித்தல், அறிவியல் கண்காட்சிகளில் கலந்து கொள்வது போன்றவை அறிவை விரிவாக்குவது குறித்து பேசினாா்.
500 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவா்கள் கலந்துகொண்டனா். மாணவா்கள் தங்களது படைப்புகளை காட்சிபடுத்தி விளக்கினா். அறிவியல் சாா்ந்த சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு எம்.ஜி.ஆா் கல்லூரியின் சாா்பாகச் சான்றிதழும், பரிசும் வழங்கப்பட்டன.
அதியமான் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலா் டாக்டா் லாசியா தம்பிதுரை, செயலாளா் சுரேஷ் பாபு, மேலாளா் நாராயணன் பங்கேற்றனா்.
படவரி... சிறந்த அறிவியல் படைப்புகளை உருவாக்கிய மாணவிக்கு சான்றிதழ் வழங்கிய எம்ஜிஆா் கல்லூரி முதல்வா் முத்துமணி.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...