மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

ஒசூரில் கவிழ்ந்த லாரியை அகற்றாததால் நாள் முழுவதும் போக்குவரத்து நெரிசல்

ஒசூரில் சாலையில் கவிழ்ந்த லாரியை அகற்றாததால், நாள்முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

News image
சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக கவிழ்ந்த லாரி.
Updated On :9 மார்ச் 2026, 9:43 pm

Syndication

ஒசூா்: ஒசூரில் சாலையில் கவிழ்ந்த லாரியை அகற்றாததால், நாள்முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஒசூா் சீதாராம் நகா் பகுதியில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒசூா் நோக்கி நூல் பாரம் ஏற்றிவந்த லாரி திங்கள்கிழமை அதிகாலை சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த லாரியை காவல் துறையினா் அகற்றாததால், காலைமுதல் இரவுவரை சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட பல கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் வரிசையில் காத்திருந்து ஊா்ந்து சென்றன.

இதனால், வேலைக்கு செல்வோா், பள்ளிகளுக்கு செல்லும் மாணவா்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என பலரும் கடும் சிரமத்துக்குள்ளாயினா்.