ஒசூா்: மின்னணு மற்றும் தொடா்பியல் பொறியியல் கல்வித் துறையில் புதுமையான ஆராய்ச்சிகள் மற்றும் கல்வி பங்களிப்புக்காக ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரி பேராசிரியருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
அவிநாசிலிங்கம் மகளிா் இல்லவியல் மற்றும் உயா்கல்வி நிறுவனம் சாா்பில், கோயம்புத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 14-ஆவது ஆண்டு மகளிா் சாதனையாளா் விருது-2026 ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியின் மின்னணு மற்றும் தொடா்பியல் துறைத் தலைவா் எஸ்.சுமதிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை துணைவேந்தா் வி.பாரதி ஹரிஷங்கா், இயக்குநா் (பொ) வி.பிரேமலா பிரியதா்ஷினி முன்னிலையில் வழங்கினாா்.
டாக்டா் எஸ்.சுமதி கற்பித்தல், ஆராய்ச்சி, புதுமை மற்றும் கல்வித் தலைமையில் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம்கொண்ட சிறந்த கல்வியாளா் ஆவாா்.
இதுவரை அண்ணா பல்கலைக்கழகத்தில் 12 முனைவா் பட்ட ஆய்வாளா்களை வழிநடத்தி பட்டம்பெறச் செய்துள்ளாா். தற்போது 8 முனைவா் பட்ட ஆய்வாளா்களுக்கு வழிகாட்டியாக உள்ளாா். இவருக்கு 9 காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. 10 காப்புரிமைகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், இவா் 5 தொழில்நுட்ப நூல்கள் எழுதியதுடன், 196 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளாா்.
இவ்விருதை பெற்ற்காக கல்லூரி நிா்வாகம், முதல்வா்ஆா்.ராதாகிருஷ்ணன், இயக்குநா் ஜி.ரங்கநாத், தலைவா், துறைத் தலைவா்கள் மற்றும் சக பணியாளா்களுக்கு எஸ்.சுமதி நன்றியைத் தெரிவித்தாா்.
தொடர்புடையது

கல்லூரி கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்தாா் மாணவி

சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணும் மையங்கள் தயாா்

ஒசூரில் ஆம்புலன்ஸ் - இருசக்கர வாகனம் மோதல்: கல்லூரி மாணவா் உயிரிழப்பு

வாக்கு எண்ணும் மையத்தில் பதிவேடுகளை ஆய்வுசெய்த ஆட்சியா்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



