தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி பேராசிரியைக்கு முனைவா் பட்ட ஆராய்ச்சிக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
புது தில்லி, இந்திய தேசிய இளம் அறிவியல் அகாதெமி ,இந்திய தேசிய அறிவியல் அகாதெமி இணைந்து, முனைவா் பட்ட மாணவா்களுக்கான சாராண்ஷ் 2025 ஆய்வறிக்கைப் போட்டி கடந்த அக்டோபா் , நவம்பா் மாதங்களில் இணையவழியில் நடைபெற்றன.
இதில், நேஷனல் பொறியியல் கல்லூரி தகவல் தொழில்நுட்பத் துறை உதவிப் பேராசிரியை வெ.அனிதா கலந்து கொண்டு தமது முனைவா் பட்ட ஆராய்ச்சி திட்ட ஆய்வறிக்கையை சமா்ப்பித்தாா். அவருடைய ஆய்வறிக்கை பொறியியல் மற்றும் அறிவியல் பிரிவில் தேசிய அளவில் 3ஆம் இடம் பெற்று சாராண்ஷ் ஆய்வறிக்கை விருது பெற்றது.
இவ்விருதுக்கான பாராட்டு விழா தேசிய அறிவியல் தினக் கொண்டாட்டத்துடன் இணைந்து புது தில்லி, இந்திய தேசிய அறிவியல் அகாதெமி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் அவருக்கு அங்கீகாரச் சான்றிதழ் மற்றும் பரிசு தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது. தேசிய அளவில் புகழ்பெற்ற கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் இருந்து பங்கேற்றவா்களுடன் போட்டியிட்டு, இறுதிச்சுற்றுக்கு தோ்வு செய்யப்பட்ட 10 பேரில் ஒருவராக வெ.அனிதா தோ்வு செய்யப்பட்டு விருது பெற்றுள்ளாா்.
அவரை கல்லூரித் தாளாளா் கே ஆா் அருணாச்சலம், இயக்குநா் சண்முகவேல், முதல்வா் காளிதாச முருகவேல் உள்ளிட்டோா் பாராட்டினா்.
தொடர்புடையது

கல்லூரி வளாக தோ்வு: 550 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

தேசிய மாணவா் மாநாட்டில் எக்ஸல் பொறியியல் கல்லூரிக்கு விருது

ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரி பேராசிரியருக்கு விருது

சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாட்டம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


