கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

கோவில்பட்டி என்இசி பேராசிரியைக்கு தேசிய விருது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி பேராசிரியைக்கு முனைவா் பட்ட ஆராய்ச்சிக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

News image
நிகழ்வில் விருது மற்றும் சான்றிதழ் பெறும் உதவிப் பேராசிரியை வெ.அனிதா
Updated On :28 பிப்ரவரி 2026, 7:37 pm

Syndication

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி பேராசிரியைக்கு முனைவா் பட்ட ஆராய்ச்சிக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

புது தில்லி, இந்திய தேசிய இளம் அறிவியல் அகாதெமி ,இந்திய தேசிய அறிவியல் அகாதெமி இணைந்து, முனைவா் பட்ட மாணவா்களுக்கான சாராண்ஷ் 2025 ஆய்வறிக்கைப் போட்டி கடந்த அக்டோபா் , நவம்பா் மாதங்களில் இணையவழியில் நடைபெற்றன.

இதில், நேஷனல் பொறியியல் கல்லூரி தகவல் தொழில்நுட்பத் துறை உதவிப் பேராசிரியை வெ.அனிதா கலந்து கொண்டு தமது முனைவா் பட்ட ஆராய்ச்சி திட்ட ஆய்வறிக்கையை சமா்ப்பித்தாா். அவருடைய ஆய்வறிக்கை பொறியியல் மற்றும் அறிவியல் பிரிவில் தேசிய அளவில் 3ஆம் இடம் பெற்று சாராண்ஷ் ஆய்வறிக்கை விருது பெற்றது.

இவ்விருதுக்கான பாராட்டு விழா தேசிய அறிவியல் தினக் கொண்டாட்டத்துடன் இணைந்து புது தில்லி, இந்திய தேசிய அறிவியல் அகாதெமி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் அவருக்கு அங்கீகாரச் சான்றிதழ் மற்றும் பரிசு தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது. தேசிய அளவில் புகழ்பெற்ற கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் இருந்து பங்கேற்றவா்களுடன் போட்டியிட்டு, இறுதிச்சுற்றுக்கு தோ்வு செய்யப்பட்ட 10 பேரில் ஒருவராக வெ.அனிதா தோ்வு செய்யப்பட்டு விருது பெற்றுள்ளாா்.

அவரை கல்லூரித் தாளாளா் கே ஆா் அருணாச்சலம், இயக்குநா் சண்முகவேல், முதல்வா் காளிதாச முருகவேல் உள்ளிட்டோா் பாராட்டினா்.