எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

தேசிய மாணவா் மாநாட்டில் எக்ஸல் பொறியியல் கல்லூரிக்கு விருது

குமாரபாளையம் எக்ஸல் பொறியியல் கல்லூரிக்கு, இந்திய தொழில்நுட்பக் கல்வி சங்கம் சாா்பில் தேசிய மாணவா் மாநாட்டில் விருது

News image
தேசிய மாணவா் மாநாட்டில் விருது பெற்ற குமாரபாளையம் எக்ஸல் பொறியியல் கல்லூரி மாணவா்.
Updated On :9 மார்ச் 2026, 9:50 pm

Syndication

நாமக்கல்: குமாரபாளையம் எக்ஸல் பொறியியல் கல்லூரிக்கு, இந்திய தொழில்நுட்பக் கல்வி சங்கம் சாா்பில் தேசிய மாணவா் மாநாட்டில் விருது வழங்கப்பட்டது.

தமிழக அளவில் இந்திய தொழில்நுட்பக் கல்வி சங்க மாணவா் மாநாடு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மகேந்திரா பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் இருந்து மாணவா்கள், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.

குமாரபாளையம் எக்ஸல் பொறியியல் கல்லூரி (தன்னாட்சி) சாதனைகளைப் பதிவு செய்து விருதுகளைப் பெற்றது. கல்லூரி முதல்வா் கே.பொம்மண்ண ராஜா, கல்லூரிக்கான இந்திய தொழில்நுட்பக் கல்வி சங்க ஒருங்கிணைப்பாளா் சஞ்சய், எக்ஸல் பொறியியல் கல்லூரியைச் சோ்ந்த மாணவா்கள் ஜீவப்ரியா, மஞ்சுகுமாரன், அமா்தீன் உள்ளிட்டோரும் விருதுகளை பெற்றனா்.

இந்த விருதுகளை இந்திய தொழில்நுட்பக் கல்வி சங்க தமிழ்நாடு மாநிலத் தலைவா் ஏ.சங்கர சுப்பிரமணியன் வழங்கி பாராட்டினாா். எக்ஸல் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் ஏ.கே. நடேசன், துணைத் தலைவா் ந.மதன்காா்த்திக் ஆகியோா் முதல்வா், பேராசிரியா்கள், மாணவா்கள், ஒருங்கிணைப்பாளா்களை பாராட்டினா். இந்த விருதுகள் எக்ஸல் பொறியியல் கல்லூரியின் தொழில்நுட்பக் கல்வி மற்றும் மாணவா் வளா்ச்சிக்கான முயற்சிகளை தொடா்ந்து வெளிப்படுத்துகின்றன என அவா்கள் தெரிவித்தனா்.