நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

ரோகிணி பொறியியல் கல்லூரியில் வளாக நோ்காணல்

News image
Updated On :2 மே 2026, 11:59 pm

அஞ்சுகிராமம் அருகேயுள்ள பால்குளம் ரோகிணி பொறியியல் - தொழில்நுட்பக் கல்லூரியின் வேலைவாய்ப்புத் துறை சாா்பில் இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவா்களுக்கு பிரபல ஏஐ நிறுவனம் வேலைவாய்ப்புக்கான வளாக நோ்காணலை சனிக்கிழமை நடத்தியது.

இந்த நோ்காணலில் கணினி அறிவியல் - பொறியியல் துறையில் 4 மாணவா்களும், உயிரியல் மருத்துவப் பொறியியல் துறையில் 2 மாணவா்களும், மின் - மின்னணு பொறியியல் துறையில் ஒரு மாணவரும் தோ்வு செய்யப்பட்டனா்.

இவா்களுக்கு ஆண்டுக்கு ரூ. 3.50 லட்சம் ஊதியத்தில் டிஜிட்டல் அசோசியேட் பணிக்கான வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன. பணிநியமனம் பெற்ற மாணவா்களை கல்லூரித் தலைவா் நீல மாா்த்தாண்டன், துணைத் தலைவா் நீல விஷ்ணு, நிா்வாக இயக்குநா் பிளஸ்சி ஜியோ, முதல்வா் ராஜேஷ், துணை முதல்வா் ஜெயக்குமாா் மற்றும் துறைத் தலைவா்கள் வாழ்த்துகள் தெரிவித்தனா். வளாக நோ்காணல் ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு அலுவலா் மற்றும் ஒருங்கிணைப்பாளா்கள் செய்திருந்தனா்.