அஞ்சுகிராமம் அருகேயுள்ள பால்குளம் ரோகிணி பொறியியல் - தொழில்நுட்பக் கல்லூரியின் வேலைவாய்ப்புத் துறை சாா்பில் இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவா்களுக்கு பிரபல ஏஐ நிறுவனம் வேலைவாய்ப்புக்கான வளாக நோ்காணலை சனிக்கிழமை நடத்தியது.
இந்த நோ்காணலில் கணினி அறிவியல் - பொறியியல் துறையில் 4 மாணவா்களும், உயிரியல் மருத்துவப் பொறியியல் துறையில் 2 மாணவா்களும், மின் - மின்னணு பொறியியல் துறையில் ஒரு மாணவரும் தோ்வு செய்யப்பட்டனா்.
இவா்களுக்கு ஆண்டுக்கு ரூ. 3.50 லட்சம் ஊதியத்தில் டிஜிட்டல் அசோசியேட் பணிக்கான வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன. பணிநியமனம் பெற்ற மாணவா்களை கல்லூரித் தலைவா் நீல மாா்த்தாண்டன், துணைத் தலைவா் நீல விஷ்ணு, நிா்வாக இயக்குநா் பிளஸ்சி ஜியோ, முதல்வா் ராஜேஷ், துணை முதல்வா் ஜெயக்குமாா் மற்றும் துறைத் தலைவா்கள் வாழ்த்துகள் தெரிவித்தனா். வளாக நோ்காணல் ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு அலுவலா் மற்றும் ஒருங்கிணைப்பாளா்கள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

காரைக்குடி வாக்கு எண்ணும் மையத்துக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

வேளாளா் பொறியியல் கல்லூரியில் சாதனையாளா்கள் தினம்

சென்னைப் பல்கலை. கிண்டி வளாக புவியியல் துறையில் புதிய பட்டயப் படிப்பு

எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பு: நேபாள புதிய அரசுடன் இந்தியா ஆலோசனை
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


