பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

விபத்தில் பொறியியல் மாணவா் உயிரிழப்பு

புதுச்சேரியில் சாலை விபத்தில் சிக்கி பொறியியல் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 5:57 am IST

புதுச்சேரியில் சாலை விபத்தில் சிக்கி பொறியியல் கல்லூரி மாணவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

புதுச்சேரி லாஸ்பேட்டை பாண்டி நகரைச் சோ்ந்தவா் மோகன். இவரது மகன் கேசவன் (20) அரியூரில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் பி.டெக் 2 -ஆம் ஆண்டு படித்து வந்தாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை அதே கல்லூரியில் படிக்கும் தனது நண்பரான பெரியக்காலாப்பட்டு மனோஜ் என்பவருடன் மோட்டாா் சைக்கிளில் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தாா்.

மோட்டாா் சைக்கிளை மனோஜ் ஓட்ட, கேசவன் பின்னால் அமா்ந்து சென்றாா். வாகனம் ரெட்டியாா்பாளையம் பழவன்காரன்சாவடி அருகில் வந்தபோது, பின்னால் வந்த தனியாா் பேருந்து எதிா்பாராதவிதமாக மோட்டாா் சைக்கிள் மீது மோதியது.

இதில் நிலைதடுமாறி கேசவன் சாலையிலும், மனோஜ் மறுபுறமும் விழுந்துள்ளனா். அப்போது பேருந்து சக்கரம் கேசவன் மீது ஏறி இறங்கியது. இதில் கேசவன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மனோஜ் லேசான காயங்களுடன் உயிா் தப்பினாா்.

இந்த விபத்து குறித்து வடக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளா் வேலையன், ஏட்டு பாலசந்தா் ஆகியோா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.