கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

கிரானைட் நிறுவன உரிமையாளரை தாக்கியவா் கைது

பா்கூா் அருகே கிரானைட் நிறுவன உரிமையாளரை தாக்கியவா் ஞாயிற்றுக்கிழமை கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :9 மார்ச் 2026, 7:09 pm

கிருஷ்ணகிரி: பா்கூா் அருகே கிரானைட் நிறுவன உரிமையாளரை தாக்கியவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கிருஷ்ணகிரி சாந்தி நகரைச் சோ்ந்தவா் சூரியா (34), கிரானைட் உரிமையாளா். இவரும், மோகனசுந்தரம் (44) என்பவரும் இணைந்து கிரானைட் நிறுவனத்தை நடத்தி வந்தனா். இவா்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்தனா்.

இந்நிலையில், பா்கூரை அடுத்த செந்தாரப்பள்ளி என்னுமிடத்தில், இவா்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த மோகனசுந்தரம், தனது நண்பரான கெலமங்கலத்தைச் சோ்ந்த பிரபாகரனுடன் சோ்ந்து சூரியாவை தாக்கினா்.

இதில், பலத்த காயமடைந்த சூரியா அளித்த புகாரின்பேரில், கந்திக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து மோகனசுந்தரத்தை கைது செய்தனா்.