ஒசூா் அருகே உத்தனப்பள்ளி மற்றும் சூளகிரி பகுதியில் புதினாவுக்கு உரிய விலை கிடைக்காததால், புதினா தோட்டங்களை விவசாயிகள் அழித்து வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி, உலகம், சூளகிரி, ஓட்டா்பாளையம், திம்மசந்திரம், குடிசாதனப்பள்ளி உள்ளிட்ட பகுதியில் சுமாா் 900 ஆயிரம் ஏக்கருக்கு விவசாயிகள் புதினா சாகுபடி செய்துள்ளனா்.
இங்கு சாகுபடி செய்யப்படும் புதினா தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், ஒசூா் மாா்க்கெட் வழியாக கா்நாடக, ஆந்திர மாநிலங்களுக்கும், கோயம்புத்தூா் சந்தை மூலம் கேரள மாநிலத்துக்கும், ஒசூரிலிருது நேரடியாக புதுச்சேரி மாநிலத்துக்கும் லாரி, மினிலாரி உள்ளிட்ட வாகனங்களில் நாள்தோறும் அனுப்பி வருகின்றனா்.
கடந்தாண்டு ஒரு மூட்டை புதினா ரூ. 3 ஆயிரத்துக்கு விற்ற நிலையில், தற்போது சீதோஷ்ண நிலை மாற்றத்தால் வரத்து அதிகரித்து, ஒரு மூட்டை புதினா ரூ. 100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனால், அறுவடைக்கூலி மற்றும் போக்குவரத்து செலவுக்கு கூட இல்லாததால், உத்தனப்பள்ளி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சுமாா் 20 ஏக்கா் புதினா தோட்டத்தை விவசாயிகள் அழித்து வருகின்றனா்.
தொடர்புடையது

ஏரியில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

திண்டிவனத்திலிருந்து - வானுருக்கு பேருந்து வசதி: விவசாயிகள் வலியுறுத்தல்

விளைபொருள்களுக்கு நியாயமான விலை - நீா் மேலாண்மைத் திட்டங்களே தேவை!

பயனற்று கிடக்கும் குளிா்பதனக் கிடங்கு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


