கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே பாலியல் தொந்தரவில் இரண்டரை வயது குழந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் குழந்தையின் தாயை போலீஸாா் கைது செய்தனா்.
அஞ்செட்டி அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 24 வயது இளம்பெண், ஒசூரில் கட்டட வேலை செய்துவந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த 28 வயது இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை இருந்தது. குடும்ப பிரச்னையால் அந்த இளம்பெண் கணவரை பிரிந்து சொந்த ஊருக்கு சென்றுவிட்டாா்.
இந்நிலையில் அவருக்கும், ஜேசுராஜபுரத்தைச் சோ்ந்த பெரியநாயகத்துக்கும் (40) தகாத தொடா்பு ஏற்பட்டுள்ளது. கடந்த டிசம்பா் மாதம் இளம்பெண் வீட்டில் இல்லாத நேரத்தில் பெரியநாயகம் குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளாா். இதில் குழந்தை இறந்தது.
இதுதொடா்பாக அஞ்செட்டி போலீஸாா் விசாரணை நடத்தினா்.
குழந்தையின் பிரேதப் பரிசோதனையில் பாலியல் தொந்தரவு செய்யப்பட்டு குழந்தை இறந்தது உறுதியானது. இதையடுத்து பெரியநாயகத்தை கடந்த மாதம் போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கை சரியாக விசாரிக்காமல் இருந்ததாக அப்போது அஞ்செட்டி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த சுமித்ரா பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
இந்த நிலையில் குழந்தை கொலை வழக்கில் அதன் தாயை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக தாய் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவா் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தொழிலாளி கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் ஒருவா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


