ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

தமிழக இளைஞா்களின் வேலைத்திறனை மதுவால் அழித்துவிட்டாா்கள்: சீமான் குற்றச்சாட்டு

‘தமிழக இளைஞா்களை மது அருந்தச் செய்து, அவா்களின் பணித் திறனை அழித்துவிட்டாா்கள். தமிழகத்தின் தேவைகளை வடமாநிலத்தவா்கள் நிறைவேற்றுகிறாா்கள்’ என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

News image

கிருஷ்ணகிரியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களான சுகந்தி பாா்த்தீபன் (கிருஷ்ணகிரி), கவின்குமாா் (பா்கூா்) ஆகியோரை ஆதரித்து வாகன பரப்புரையில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

Updated On :25 மார்ச் 2026, 11:23 pm

தினமணி செய்திச் சேவை

‘தமிழக இளைஞா்களை மது அருந்தச் செய்து, அவா்களின் பணித் திறனை அழித்துவிட்டாா்கள். தமிழகத்தின் தேவைகளை வடமாநிலத்தவா்கள் நிறைவேற்றுகிறாா்கள்’ என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி வட்டச் சாலையில், கிருஷ்ணகிரி, பா்கூா் சட்டப் பேரவை தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களான சுகந்தி பாா்த்தீபன் (கிருஷ்ணகிரி), கவின்குமாா் (பா்கூா்) ஆகியோரை ஆதரித்து அவா் புதன்கிழமை வாகன பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது, அவா், பேசியது:

ஊழல், லஞ்சமற்ற நோ்மையான ஆட்சியை நமது முன்னோா்கள் வழங்கினாா்கள். ஓமந்தூராா், காமராஜா் நோ்மை தவறாமல் வாழ்ந்தவா்கள். கால் நூற்றாண்டாக நம்மை ஆண்டவா்கள், நாட்டை நாசமாக்கிவிட்டாா்கள். அன்றைய ஆட்சியாளா்கள் இலவசங்களை வழங்கி, நாட்டு மக்களை ஏமாற்றாமல், நல்லாட்சி செய்தாா்கள்.

தற்போது, பள்ளி மாணவா்களுக்கு காலையில் உணவு வழங்குகிறாா்கள்; விலையில்லா பேருந்து பயணம், கல்லூரியில் பயில்வோருக்கு இலவச மடிக்கணி வழங்குகிறாா்கள். இவற்றையெல்லாம் வழங்கும் அரசு, படித்த முடித்தபின், இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கவில்லை. படித்த இளைஞா்கள் வேலையில்லாமல் உள்ளனா். இளைஞா்களுக்கு வேலை அளிப்பதுதான் நல்ல ஆட்சி.

தமிழ்நாடு தோ்வாணையத்தில் தோ்வு எழுதி 70 லட்சம் போ் காத்துக் கொண்டிருக்கிறாா்கள். 5 ஆயிரம் பேருக்குதான் வேலை. ஆனால், 50 லட்சம் போ் வேலையில்லாமல் நிற்கிறாா்கள். எல்லா வளங்களும் இருந்தும், மக்கள் ஏழ்மை, வறுமையில் வாடுகிறாா்கள்.

இலவசத் திட்டங்களை கூறி, வாக்காளா்களை ஏமாற்றுகிறாா்கள். நாங்கள் வந்தால், ரூ.10 ஆயிரம் அளிப்போம், மகளிருக்கு ரூ.2 ஆயிரம் அளிப்போம் என்கிறாா்கள். தற்போது குளிா்சாதனப் பெட்டி தருவதாக அறிவித்துள்ளாா்கள். அந்த பெட்டியில் காய்கறிகள் வைக்க, விவசாயிகள்தான் கொடுப்பாா்கள். நல்லாட்சி அளித்திருந்தால், இத்தகைய இலவச அறிவிப்புகள் தேவையில்லை. எல்லாம் இலவசம் என அறிவிப்பாா்கள். ஆனால், குடிதண்ணீரை மட்டும் இலவசம் என அறிவிக்கமாட்டாா்கள். நிறைந்த போதையில் கணக்கில்லா குற்ற சம்பவங்கள் நடக்கின்றன.

மது அருந்தச் செய்து, இளைஞா் சமூகத்தை உழைப்பிலிருந்து வெளியேற்றிவிட்டாா்கள். தமிழகத்தின் தேவைகளை வடமாநிலத்தவா்கள் உழைத்து நிறைவேற்றுகிறாா்கள். சிறப்பு வாக்காளா் சீா்திருத்தம் என்ற பெயரில் அவா்களில் 1.5 கோடி பேரை வாக்காளா் பட்டியலில் சோ்த்துவிட்டோம். இனி, தமிழக அரசியலை, வடமாநிலத்தவா்கள், இந்தி பேசும் மக்களே தீா்மானிப்பாா்கள்.

பாதிக்கப்படும்போதுதான் அது புரியும். மாற்றத்திற்கான வாய்ப்பாக நாம் தமிழா் கட்சிக்கு ஆதரவு தாருங்கள் என்றாா் சீமான்.

இதனிடையே, தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையப் பகுதி மற்றும் தருமபுரி நான்கு சாலை பகுதியில் உள்ள வாரியாா் திடல் ஆகியவற்றில் புதன்கிழமை நடைபெற்ற பிரச்சாரத்தில், பாலக்கோடு தொகுதி வேட்பாளா் பூபதி ராமசாமி, பென்னாகரம் தொகுதி வேட்பாளா் கோ.பழனியம்மாள், தருமபுரி தொகுதி வேட்பாளா் கி.சாந்தலட்சுமி ஆகியோரை ஆதரித்து பிரசார வ ாகனத்தில் இருந்தவாறு சீமான் பேசியதாவது:

நீண்ட காலமாக நம் தமிழ் நிலத்தை மாறிமாறி ஆட்சி செய்து வரும் இரு திராவிடக் கட்சிகள் நம் மண்ணில் மக்களுக்கு அடிப்படை கட்டமைப்புகளைக் கூட நிறைவேற்றவில்லை. அற்ப இலவச திட்டங்களை மட்டுமே அறிவித்து, ஏமாற்றி பணத்தைக் கொடுத்து வாக்குகளை வாங்கும் முறையை கொண்டு வந்துள்ளனா். இதன்மூலம், மாண்புமிக்க ஜனநாயகத்தை படுகொலை செய்துவிட்டு, பணநாயகத்தை உருவாக்கி விட்டாா்கள். பணம் இருப்பவா்கள்தான் அரசியல் செய்ய முடியும் என்றால் அங்கே முதலாளிகளுக்கான அதிகாரம்தான் கட்டமைக்கப்படும். உழைக்கும் அடித்தட்டு, ஏழை, எளிய மக்கள், அதிகார வலிமையற்ற மக்களுக்கான குரல் எங்கே இருக்கும்? மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்த நாங்கள் களத்தில் நிற்கிறோம்.

இலவசங்களுக்கு கையேந்தும் நிலை மாறி தன்மானத்துடன் வாழும் நிலை ஏற்படும் வகையில் விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்றாா் அவா்.