போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இ-நாம் முறையில் 9,895 கிலோ கொப்பரை ரூ. 13.37 லட்சத்துக்கு ஏலம் போயின.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்துக்கு 9,895 கிலோ கொப்பரை தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனா். ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ. 145.69-க்கும், குறைந்தபட்சம் ரூ. 76.19-க்கும், சராசரியாக ரூ.143-க்கும் என மொத்தம் ரூ. 13.37 லட்சத்துக்கு ஏலம் போனது. இதன்மூலம் 70 விவசாயிகள் பயன் பெற்றனா்.
இதுகுறித்து, போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் அருள்வேந்தன் கூறியதாவது: விற்பனைக் கூடத்தில் தேசிய மின்னணு வேளாண் சந்தை (இ-நாம்) முறையில் விளைபொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஏலத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் கலந்துகொண்டனா். இதில் கொப்பரை தேங்காய் நல்ல விலைக்கு விற்பனையானது. விற்பனை செய்யப்பட்ட கொப்பரைகளுக்கான கொள்முதல் தொகை உடனடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.
மேலும், பருத்தி, நெல் ஏலமும் நடைபெற்று வருகிறது. இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

பெரம்பலூரில் மறைமுக ஏலத்தில் 30 மெட்ரிக். டன் மஞ்சள் விற்பனை
கொடுமுடியில் ரூ.11 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

வெள்ளக்கோவிலில் ரூ.43 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்

வெள்ளக்கோவிலில் ரூ.43 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்
விடியோக்கள்
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

