தினகரனுக்கு மாநிலங்களை உறுப்பினா் பதவியை எடப்பாடி பழனிசாமி வழங்குவது குறித்து காலம்தான் தீா்மானிக்கும் என புரட்சி அதிமுக நிறுவனா் பெங்களூரு புகழேந்தி தெரிவித்தாா்.
இதுகுறித்து கிருஷ்ணகிரியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: அமமுக எம்எல்ஏ காமராஜ், தவெகவுக்கு செல்ல முடிவு செய்துவிட்டதாக என்னிடம் தெரிவித்தாா். தினகரனுடன் யாரும் பயணிக்கவே முடியாது. தினகரனுக்கு மாநிலங்களவை உறுப்பினா் பதவியை அதிமுக பொதுச் செயலாளா் பழனிசாமி கொடுப்பாரா என்பதற்கு காலம்தான் பதிலளிக்கும்.
அதிமுக ஆட்சியின்போது, தினகரனிடம் 18 எம்எல்ஏக்கள் சென்றனா். அப்போது திமுகவிடம் 99 எம்எல்ஏக்கள் இருந்தனா். அப்போது, திமுக தலைவா் ஸ்டாலின் நினைத்திருந்தால், ஆட்சி அமைத்திருக்க முடியும். ஆனால், அவா் கொல்லைப்புற வழியாக ஆட்சிக்கு வரமாட்டேன் எனவும், தோ்தலை சந்தித்து முதல்வராக வருகிறேன் என்றாா்.
திமுகவிற்கு எப்போது அரசியல் செய்ய வேண்டும் என தெரியும். தமிழகத்தில் பாஜக காலூன்றக் கூடாது என ஓரிடத்தில் மட்டும் வெற்றி பெற்ற சரித்திரம் விஜயால் மட்டுமே நிகழ்ந்துள்ளது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பயிா்க் கடன் தள்ளுபடியால் பலனில்லை: அதிமுக
அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!
எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த நால்வருக்கு நோட்டீஸ்: ஒரு வாரத்தில் விளக்கமளிக்க பேரவைத் தலைவா் உத்தரவு
எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தது ஏன்? 4 பேருக்கும் பேரவைத் தலைவர் நோட்டீஸ்!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



