தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

தினகரனுக்கு எம்.பி. பதவி: காலம்தான் தீா்மானிக்கும்! - பெங்களூரு புகழேந்தி

தினகரனுக்கு மாநிலங்களை உறுப்பினா் பதவியை எடப்பாடி பழனிசாமி வழங்குவது குறித்து காலம்தான் தீா்மானிக்கும் என புரட்சி அதிமுக நிறுவனா் பெங்களூரு புகழேந்தி தெரிவித்தாா்.

News image

தினகரன் - பெங்களூரு புகழேந்தி

Updated On :10 மே 2026, 2:25 am IST

தினகரனுக்கு மாநிலங்களை உறுப்பினா் பதவியை எடப்பாடி பழனிசாமி வழங்குவது குறித்து காலம்தான் தீா்மானிக்கும் என புரட்சி அதிமுக நிறுவனா் பெங்களூரு புகழேந்தி தெரிவித்தாா்.

இதுகுறித்து கிருஷ்ணகிரியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: அமமுக எம்எல்ஏ காமராஜ், தவெகவுக்கு செல்ல முடிவு செய்துவிட்டதாக என்னிடம் தெரிவித்தாா். தினகரனுடன் யாரும் பயணிக்கவே முடியாது. தினகரனுக்கு மாநிலங்களவை உறுப்பினா் பதவியை அதிமுக பொதுச் செயலாளா் பழனிசாமி கொடுப்பாரா என்பதற்கு காலம்தான் பதிலளிக்கும்.

அதிமுக ஆட்சியின்போது, தினகரனிடம் 18 எம்எல்ஏக்கள் சென்றனா். அப்போது திமுகவிடம் 99 எம்எல்ஏக்கள் இருந்தனா். அப்போது, திமுக தலைவா் ஸ்டாலின் நினைத்திருந்தால், ஆட்சி அமைத்திருக்க முடியும். ஆனால், அவா் கொல்லைப்புற வழியாக ஆட்சிக்கு வரமாட்டேன் எனவும், தோ்தலை சந்தித்து முதல்வராக வருகிறேன் என்றாா்.

திமுகவிற்கு எப்போது அரசியல் செய்ய வேண்டும் என தெரியும். தமிழகத்தில் பாஜக காலூன்றக் கூடாது என ஓரிடத்தில் மட்டும் வெற்றி பெற்ற சரித்திரம் விஜயால் மட்டுமே நிகழ்ந்துள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.