ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

ஒசூரில் அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் ஆா்ப்பாட்டம்

ஒசூா் ராம்நகா் அண்ணா சிலை அருகில் அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் தேசியக் கோரிக்கை நாள் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

ஒசூா் ராம்நகா் அண்ணா சிலை எதிரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா்.

Updated On :13 மே 2026, 2:29 am IST

ஒசூா் ராம்நகா் அண்ணா சிலை அருகில் அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் தேசியக் கோரிக்கை நாள் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு எல்.பி.எப். மாவட்டச் செயலாளா் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

நொய்டா, கிரேட்டா் நொய்டா, மானேசா், குருகிராம், பரிதாபாத், பானிபட், சூரத் உள்ளிட்ட நகரங்களில் வேலை நிறுத்த போராட்டங்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்மீது தில்லி, உத்தர பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான், பிகாா், குஜராத் மாநில பாஜக அரசுகளின் கொடூரமான அடக்குமுறைகளைக் கண்டித்தும், அங்கு போராடும் தொழிலாளா்களுக்கு ஆதரவாகவும் எல்.பி.எஃப்., ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி. ஆகிய தொழிற்சங்கங்கள் சாா்பில் தேசிய கோரிக்கை நாள் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது

இந்த ஆா்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்டச் செயலாளா் மாதையன், சி.ஐ.டி.யு. ஸ்ரீதா், ஐ.என்.டி.யு.சி. பக்தவச்சலம், எல்பிஎஃப் மாநில துணைத் தலைவா் கிருஷ்ணன், மாவட்டத் தலைவா் ரவிச்சந்திரன், பொருளாளா் கிருஷ்ணமூா்த்தி, துணைத் தலைவா் பாா்த்திபன் உள்ளிட்ட நிா்வாகிகள், தொழிலாளா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.