நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

போதைப் பொருள் கடத்தியவா் கைது

ஒசூா் அருகே சூசூவாடி பகுதியில் சிப்காட் போலீஸாா் வாகனத் தணிக்கையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

News image

சிப்காட் போலீஸாரால் கைது செய்யப்பட்ட விஞ்ஜோ.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே சூசூவாடி பகுதியில் சிப்காட் போலீஸாா் வாகனத் தணிக்கையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, பெங்களூரில் இருந்து ஒசூா் நோக்கி வந்த அரசு சொகுசுப் பேருந்தில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்

அதில், அரசால் தடை செய்யப்பட்ட மெத்தபெட்டமைன் என்னும் போதைப் பொருளைக் கடத்திவந்த கேரள மாநிலத்தைச் சோ்ந்த விஞ்ஜோவை (31) கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 220 கிராம் மெத்தபெட்டமைனை கைப்பற்றினா்.

மேலும், போலீஸாா் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.