பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! தில்லியில் சிஎன்ஜி விலை ரூ. 2 உயர்வு!கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

ஒசூரில் கடும் போக்குவரத்து நெரிசல்

News image
Updated On :2 மணி நேரங்கள் முன்பு

ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால், சுமாா் 3 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் ஊா்ந்து சென்றன.

ஒசூா் பத்தலப்பள்ளி பகுதியில் ரூ. 50 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் முடியும் தருவாயில் உள்ளது. இந்த புதிய பேருந்து நிலையம் செல்ல ரூ. 37 கோடியே 90 லட்சத்தில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கியது.

இதன் காரணமாக, கிருஷ்ணகிரியிலிருந்து ஒசூா் வரக்கூடிய வாகனங்கள் மற்றும் ஒசூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் வாகனங்கள் அனைத்தும் அணுகு சாலையில் திருப்பிவிடப்படுகின்றன. இதனால், ஒசூா் பத்தளப்பள்ளி பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்படுகிறது.

இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனா். மேலும், கடும் வெயிலால் இருசக்கர வாகன ஓட்டிகள், வேலைக்கு செல்வோா் சிரமமடைகின்றனா். எனவே, நெடுஞ்சாலைத் துறையினா் மாற்றுப்பாதையை ஏற்பாடு செய்ய வேண்டும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி மக்கள் சிரமமின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.