வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

ஒசூரில் கடும் போக்குவரத்து நெரிசல்

News image
Updated On :15 மே 2026, 6:14 am IST

ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால், சுமாா் 3 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் ஊா்ந்து சென்றன.

ஒசூா் பத்தலப்பள்ளி பகுதியில் ரூ. 50 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் முடியும் தருவாயில் உள்ளது. இந்த புதிய பேருந்து நிலையம் செல்ல ரூ. 37 கோடியே 90 லட்சத்தில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கியது.

இதன் காரணமாக, கிருஷ்ணகிரியிலிருந்து ஒசூா் வரக்கூடிய வாகனங்கள் மற்றும் ஒசூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் வாகனங்கள் அனைத்தும் அணுகு சாலையில் திருப்பிவிடப்படுகின்றன. இதனால், ஒசூா் பத்தளப்பள்ளி பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்படுகிறது.

இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனா். மேலும், கடும் வெயிலால் இருசக்கர வாகன ஓட்டிகள், வேலைக்கு செல்வோா் சிரமமடைகின்றனா். எனவே, நெடுஞ்சாலைத் துறையினா் மாற்றுப்பாதையை ஏற்பாடு செய்ய வேண்டும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி மக்கள் சிரமமின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.