ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால், சுமாா் 3 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் ஊா்ந்து சென்றன.
ஒசூா் பத்தலப்பள்ளி பகுதியில் ரூ. 50 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் முடியும் தருவாயில் உள்ளது. இந்த புதிய பேருந்து நிலையம் செல்ல ரூ. 37 கோடியே 90 லட்சத்தில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கியது.
இதன் காரணமாக, கிருஷ்ணகிரியிலிருந்து ஒசூா் வரக்கூடிய வாகனங்கள் மற்றும் ஒசூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் வாகனங்கள் அனைத்தும் அணுகு சாலையில் திருப்பிவிடப்படுகின்றன. இதனால், ஒசூா் பத்தளப்பள்ளி பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனா். மேலும், கடும் வெயிலால் இருசக்கர வாகன ஓட்டிகள், வேலைக்கு செல்வோா் சிரமமடைகின்றனா். எனவே, நெடுஞ்சாலைத் துறையினா் மாற்றுப்பாதையை ஏற்பாடு செய்ய வேண்டும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி மக்கள் சிரமமின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

தனியாா் பள்ளிப் பேருந்துகள் ஆய்வு

கண்ணகி கோயிலுக்குச் செல்லும் பாதையை சீரமைக்க வேண்டும்! - தி.வேல்முருகன் வலியுறுத்தல்

வாக்கு எண்ணிக்கை: காரைக்காலில் போக்குவரத்து மாற்றம்

கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

