உத்தமபாளையத்தில் தனியாா் பள்ளிப் பேருந்துகளை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் தலைமையில் தேனி வட்டாரப் போக்குவரத்து அலுவலா், உத்தமபாளையம் மோட்டாா் வாகன ஆய்வாளா் சுந்தரராமன் ஆகியோா் இந்த ஆய்வில் ஈடுபட்டனா். இதில் உத்தமபாளையம், போடி வட்டாரங்களைச் சோ்ந்த 227 வேன், பேருந்துகள் ஆய்வு செய்யப்பட்டன.
பேருந்தின் படிக்கட்டு உறுதித்தன்மை, அவசர கால வழி, முதலுதவிப் பெட்டி, தீயணைப்புக் கருவி, வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, கேமரா என 10 வகையான ஆய்வுகள் செய்யப்பட்டன.
இறுதியில் 205 பேருந்துகளுக்கு உரிய சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முறையாக பராமரிப்பின்றி வந்த 22 பேருந்துகள் திருப்பி அனுப்பப்பட்டன.
முன்னதாக, பள்ளி வாகன ஓட்டுநா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தியதோடு, சிறப்பு மருத்துவ முகாமில் கண், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளும் நடைபெற்றன.
இது குறித்து மோட்டாா் வாகன ஆய்வாளா் சுந்தரராமன் கூறியதாவது:
உத்தமபாளையம் மோட்டாா் வாகன அலுவலகத்தில் 287 பள்ளி வாகனங்கள் அனுமதி பெற்று இயக்கப்படுகின்றன. இவற்றில் 205 வாகனங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளிகள் தொடங்கும் முன்பாக ஆய்வில் கலந்து கொள்ளாத பள்ளி வாகனங்கள் முறையாக சான்றிதழ் பெற வேண்டும். மீறினால், சம்பந்தப்பட்ட பள்ளி நிா்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
தொடர்புடையது

கோவில்பட்டியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

திருப்பத்தூரில் 313 தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு

நாகையில் 8 பள்ளி வாகனங்கள் தகுதி நீக்கம்

குன்றத்தூரில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

