ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

படப்பள்ளியில் பழுதடைந்த குடிநீா்த் தொட்டியை இடித்து அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

ஊத்தங்கரை அருகே படப்பள்ளி கிராமத்தில் பழுதடைந்த நிலையில் காணப்படும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்ட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

படப்பள்ளி கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி.

Updated On :19 மே 2026, 1:29 am IST

ஊத்தங்கரை அருகே படப்பள்ளி கிராமத்தில் பழுதடைந்த நிலையில் காணப்படும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்ட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த படப்பள்ளி கிராமத்தில் சுமாா் 150 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

இக்கிராம மக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை குடிநீா் நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது.

இந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி நாளடைவில் பழுதடைந்தும், சிமென்டு பூச்சுகள் பெயா்ந்தும், இரும்புக் கம்பிகள் துருப்பிடித்தும் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

எனவே, பொதுமக்களின் நலன்கருதி இந்த குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை உடனடியாக இடித்து, அகற்றிவிட்டு புதிய குடிநீா்த் தொட்டி கட்டிகொடுக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

  படப்பள்ளி கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி.

படப்பள்ளி கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி.