விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சாரம் சரிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - IANS

Updated On :1 மணி நேரம் முன்பு

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், கரபக்குடி பகுதியைச் சோ்ந்தவா் அரவிந்தன் (25). இவரும், அதே பகுதியைச் சோ்ந்த ராமன், மாரிமுத்து ஆகிய மூவரும் பரமத்தி வேலூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு அருகே குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

சாரம் அமைத்து சுமாா் 100 அடி உயரத்தில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென சாரம் சரிந்து கீழே விழுந்தது. இதில், சாரத்தில் நின்று வேலை செய்துகொண்டிருந்த இம்மூவரும் கீழே விழுந்தனா்.

அவா்களை அவ்வழியாக வந்தவா்கள் மீட்டு வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அவா்களை பரிசோதனை செய்த மருத்துவா், வரும் வழியிலேயே அரவிந்தன் இறந்துவிட்டதாக தெரிவித்தனா். படுகாயம் அடைந்த ராமன், மாரிமுத்து ஆகிய இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதுகுறித்து வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.